Posts

Showing posts from April, 2020

பூமாதேவியின் உச்ச கட்ட உக்கிரம்

Image
பூமித் தாய் பொறுமையின் பொக்கிஷம். பொறுத்தவர் பூமி ஆள்வார் – பொறுமை கடலிலும் பெரிது என்ற முதுமொழிகள் பூமியின் அசாத்திய பொறுமையையும், சகிப்புக் தன்மையையும் காட்டுகின்றன. ஆனால் மனிதன் மண்ணை மதிப்பதில்லை; மலையைப் பாதுகாப்பதில்லை; வருங்கால சந்ததியினரை மனத்தில் கொண்டு பூமியை மதிப்பதில்லை; பேராசை என்ற வலையில் விழுந்து இயற்கைச் செல்வங்களை பொக்கிஷமாக காத்து வாழவில்லை. பூமியின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மனிதன் லக்ஷ்மண் ரேகாவை பலமுறை மீறி செயல்பட்டுள்ளான்.  உலகளாவிய மக்கள் செவிடர்களாகி பூமியின் அபல அழுகுரலைக் கேட்க வில்லை. பூமி பல சமயங்களில் தன் உக்கிரத்தை பூமி அதிர்ச்சி, பூகம்பம், எரிமலை ஆகியவற்றுடன் உலக மக்களைப் பழிவாங்கிய சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் உலகம் பாடம் கற்கவில்லை. பூமிக்கு உலக மனிதர்களால் உண்டான பல அழிவுகளின் வலிகள் ஏராளம். அத்துடன் மனித ஜனத்தொகையின் பாரமும் அதிகம். பூமித்தாய் உலகத்து மனிதர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் விதமாக கொரோனா என்ற ஆள்கொல்லி கிருமியை தற்போது ஏவி உள்ளாள்.   பூமியின் உஷ்ணத்தைக் குறைக்கும் நீர் நிலைக...

மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம்

Image
மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம்                                  – அனுப்பு: வத்ஸலா சங்கரன் நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி. மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்ஜய மந்திரம் ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஓம் பொருள்: நறுமணம் கமழ்பவரும், உணவூட்டி வளர்ப்ப வரும், முக்கண்ணனு மாகிய சிவபெருமானே, பழுத்த வெள்ளரி பழம், அதற்கும் அதன் கொடிக்கும் எந்த வலியுமின்றி விடுபடுவதுபோல் மரணத்தின் பிடியிலிருந்து எங்களை விடுவிப்பாயாக.

அக்ஷய திரிதியை திருநாள் – 29-04-2020 – சனிகிழமை

Image
அ ட்சய ’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள் . ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் , அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , ' அட்சயதிரிதியை ’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம் . இந்த வருடம் ஏப்ரல் 29 - ம் தேதி சனிக்கிழமை  ( சித்திரை -16) அன்று அட்சய திரிதியை வருகிறது . அட்சயதிரிதியை சிறப்புகள் : பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான் . பிரளயம் முடிந்து , வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து , சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம் . திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம் . அதனால்தான் , இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர் . வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம் . பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன் , லட்சுமி தேவியை வணங்கி , செல்வத்தைப் பெற்ற தினம் . இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை , குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும்...

தமிழ் வருட புத்தாண்டு – 14-04-2020

Image
சார்வரி வருஷத்திய வெண்பா: சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும் ஏமமன்றிச் சாவார் இயல்பு  – என்று கணித்துள்ளதைப் பார்க்கும் பொழுது, கோவிட் -19 என்ற வைரஸ் உலகத்தையே மரண பிடியில் வைத்து ஸ்தம்பிக்கச் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகலாவிய துன்பத்தை பல மாதங்களுக்கு முன்பே துல்லியமாகக் கணித்த   நமது பஞ்சாங்கம் கணிக்கும் பண்டிதர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. நம்பிக்கையை நாம் கைவிடாமல் ஆண்டவனைத் தொழுது நலம் பெற வேண்டும். அதற்கு கடவுளால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ தேவதையான தன்வந்திரியைத்தான் சரணடைய வேண்டும். தன்வந்திரியைத் தொழும் மந்திரம் இதோ:

தசரதரின் பரதனின் மேல் உள்ள பாசம்

Image
தசரதரின் பரதனின் மேல் உள்ள பாசத்தை ராமன் வெளிப்படுத்துவது வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா கண்டத்தில்   ஸர்க்கம் 100-ல் வருகிறது. அவைகள் அனைத்தும் அற்புதமான அர்த்தபுஷ்டி உள்ள ரசிக்கும் பாக்களாகப் பரிமளிக்கிறது. தசரதர் பரதன் காட்டும் பாசத்தை ராமர் எப்படி வர்ணிக்கிறார் என்பதைப் பார்ப்போம். இது பரதன் ‘ராஜ்யத்தை ராமன் தான் ஆளவேண்டும். ராமனை வேண்டுவேன்’ என்று குலகுரு வசிஸ்டர், சுமந்தன், கெளசல்யா, கைகேயி, சுமத்ரா, அயோத்தியா மக்கள் ஆகியவர்களுடன் ராமனைச் சந்திக்க வரும் பொழுது ராமரின் வர்ணனையாக வால்மீகி வெளிப்படுத்துகிறார். “தசரதர் எப்பொழுதாவது உத்தமமான புஷ்பங்களைப் பார்த்தால், ‘குழந்தை பரதனுடைய தலையில் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சொல்வார். ஆனால் அந்தப் பரதன் கலைந்த சடைமுடியுடன் வந்திருக்கிறானே! நேர்த்தியான வஸ்திரங்களைக் கண்டால் ‘பரதன் இவைகளைத் தரித்தால் அல்லவா அழகாயிருக்கும். அப்படிப்பட்ட பரதன் இப்பொழுது மான் தோல் மரவுரிகளைத் தரித்துக் கொண்டிருக்கிறானே! ‘ஒரு பதார்த்தத்தை வாங்கிக் கொள்’ என்று தசரதர் வேண்டினாலும், பரதன் வாங்கிக் கொள்வது அரிது. ஆனா...