Posts

Showing posts from September, 2017

திராவிடக் கட்சித் தலைவர் ராமசாமிப் பெரியாருக்கு ஜெயகாந்தனின் மறுப்பு உரை

Image
சத்தியமேவ ஜெயதே! பெரியாரின் பேச்சுக்கு மிகவும் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும், மனத்தில் உறைக்கும் அளவுக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு, பிரமணத் துவேஷம் ஆகியவைகளை எதிர்த்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை மிகவும் அற்புதம். அனைத்தும் பகுத்தறிவுவாதிகளாலும் எதிர்த்து வாதாட முடியாத அளவுக்கு சக்தி வாய்ந்த மேடைப் பேச்சு. அதுவும் பெரியார் முன்னிலையில் தி.க.தொண்டர்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் - அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும்.   ஜெயகாந்தனின் மேடைப் பேச்சு இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரையும் தவறாமல் படிக்க வேண்டுகிறோம்.  பிராமணனுக்கு தைரியம் குறைவுதான். அதற்கு அவன் கடப்பிடிக்கும் சத்துவ குணமே காரணமாகும். ரஜஸ் குணமுள்ள சத்திரியர்களைத் தான் அவன் தன்னைக் காக்க நம்பி இருக்கிறான். இது பிராமணனின் குறையாகக் கொள்ள வேண்டியதில்லை.  பிராமணர்களுக்குக் கேடயமாக பல அப்பிராமணர்கள் அவ்வப்போது கேடயமாக இருந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் எழுத்தாளர் ஜெயகாந்தன்.  திரு ஈ வே ரா முன்னிலையில் பேசியது – ஜெயகாந்தன் 1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத...

காங்கிரஸின் முந்தய மூன்று மத்திய அமைச்சர்களின் வாசகங்கள்

Image
நமது மத்திய அரசாங்கத்தின் மூன்று மும் மூர்த்திகள் 2011-ல் அவர்கள் பதவியில் இருந்த கால கட்டத்தில் உதிர்த்த பொன் மொழிகள் இப்போது நினத்துப் பார்த்தாலும், நம்மை எல்லாம் சோகத்தில் ஆழ்த்தும் என்பது திண்ணம். .  1.    “முக்கிய கடிதத்தைப் பெற்றதற்கு ஒப்புக் கொண்டாலே, அதற்குப் பதில் அளித்தாகத்தான் அர்த்தம் ” என்பதின் ஆங்கில மொழி பெயர்ப்பு இன்னும் சுலபமாகப் புரியும். “ Acknowledgement of letter itself is Action” – இந்தப் பொன் மொழிக்குச் சொந்தக் காரர் நமது பிரதம மந்திரி மதிப்பிற்குரிய திரு. மன்மோஹன் சிங்க். (இது 2 ஜி ஸ்பெக்ரம் புகழ் ராஜா – பிரதமர் எழுப்பிய மிகவும் முக்கியமான கேள்விகளுக்கு கடிதம் கிடைத்த அன்றே ஒரு சில மணிகளிலேயே, ‘நான் முன்பு குறிப்பிட்டவைகள் அனைத்தும் சரியானவையே. நான் அப்படித் தான் செய்யப்போகிறேன் ’ என்ற ராஜாவின் கடிதத்திற்கு, ‘பெற்றுக் கொண்டேன் ’ என்ற ஒரு வரிப் பதில் கடிதம் எழுதியது நமது பிரதர் அலுவலகம்!) 2.    “எந்தச் செயலும் செய்யாமல் இருப்பதும் செயல்தான் ” என்றதின் ஆங்கில மொழி பெயர்ப்பு: No Action is also Action.  இந்த பொன் மொழிக்...

பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
முன் குறிப்பு: இந்திய அரசியல் சட்டம் ஆர்டிகிள் 370 மூலம் ஜம்மூ – காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தாலும், அதற்கு தனி தன்னாட்சி சிறப்பு அந்தஸ்து நிலையை இந்த ஆர்டிகிள் 370 உண்டாக்கியது. இந்த ஷரத்து இந்திய அரசியல் சாசனம் பகுதி 21-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 370 ஷரத்து தற்காலிகமானது, இடைக்கால ஏற்பாடு, சிறப்பு அஸ்தஸ்து என்று குறிப்பிட்டிருந்தாலும், ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சட்டசபை இந்த 370-யை ரத்து செய்யப் பரித்துரைக்காமல் கலைக்கப்பட்ட நிலையில் அதுவே நிரந்தரமான சட்டமாகி விட்டது. தனி அந்தஸ்து என்றால் ஜம்மூ – காஷ்மீருக்கு தனியான அரசியல் சாசன சட்டம், தனிக் கொடி, இந்திய அரசியல் சட்டத்திலிருந்து விலக்கு, மத்திய அரசு பாதுகாப்பு, அயல்நாட்டு உறவுகள், தகவல் தொடர்புகள் ஆகியவைகளில் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம், மற்ற சட்டங்கள் மாநில அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தல், அர்டிகிள் 370-யை ரத்து செய்வது அல்லது சட்ட திருத்தம் செய்ய ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாதன சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின் செயல்படுத்தும் நிலை – ஆகியவைகள் அடக்கம். ஜம்மூ-காஷ்மீர் அரசியல் சாசன சட்டசபை 31-10-1951 அன்று உருவாக்கப்பட்டு,...