Posts

Showing posts from August, 2017

காந்திஜியின் தனிச் செயலாளர் வெங்கட்ராம் கல்யாணம்:

Image
வெங்கட்ராம் கல்யாணம் – 1922-வது வருடம் ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர் – இப்போது அவருக்கு வயது 95. அவர் மஹத்மா காந்தியின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றியவர். இந்தியா சுதந்திரம் பெற்ற தினத்தில் காந்திஜியுடன் இவரும் கல்கத்தாவிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கும் பெலியகாட்டா என்ற இடத்தில் தங்கி இருந்தனர். நேரு காந்தியை சுதந்திரத் தினத்தன்று டெல்லிக்கு வரும்படி அழைத்த போது, காந்திஜி சொன்னார்:’ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமை எனக்கு சுதந்திரத்தை விட மிகவும் முக்கியமானதாகும்.’  காந்திஜி பிளவுபடாத இந்தியாவையே விரும்பினார். ஆனால், நேருவும் – ஜின்னாவும் அவர்களின் திட்டப்படி இந்தியாவைப் பிளவு படுத்திவிட்டனர் என்று கல்யாணம் குற்றம் சாட்டுகிறார். அவர் மேலும் சொன்ன தகவல்கள்: கல்கத்தாவில் ‘நேரடி செயலில் இறங்கும் நாள்’ என்று 16-08.-1947 நாளை குறிப்பிட்டு, மொஹமத் ஜின்னா அழைப்பு விடுத்தார். அப்போது வங்காளத்தின் பிரதம மந்திரியாக ஹுசைன் ஷஹீட் சுஹ்ராவார்டி இருந்தார். அவர் எல்லா ஹிந்துக்களையும் சூரையாடும் படி உத்திரவு பிறப்பித்தார். இதனால், 10,000 பேர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் பெரும்பான்மையினர் இந்துக்...

திண்ணைக் கச்சேரி - பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
பல மாதங்களாக திண்ணைக் கச்சேரி நடக்க வில்லை. நாட்டில் பலவிதமான பிரச்சனைகள், போராட்டங்கள், தேர்தல்கள், விவாதங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும் வாய்மையின் திண்ணைக் கச்சேரியின் நபர்கள் சந்திக்காமலேயே இருந்து விட்டார்கள். ஆனால், சமீபத்தில் பதவிக் காலம் முடித்த துணை ஜனாதிபதி மொஹமத் ஹமித் அன்சாரி பெங்களூர் தேசிய இந்திய சட்டக் கல்லூரியின் 25-வது வருட விழா பேச்சிலும்,கரன் தாபர் ராஜ்ய சபா டி.வி.க்கு எடுத்த பேட்டியிலும், ’ஹிந்துக்களிடம் சகிப்புத் தன்மை இல்லாமையால் முஸ்லீம்கள் பாதுகாப்பில்லாத நிலையில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மதச் சார்பின்மை மதிக்கப்படவில்லை. சட்டங்கள் எங்கு மதிக்கப்படவில்லையோ, அங்கே கொடுங்கோல் அரசு கோலோச்சும். இது அரசியல் சாதனத்திற்கு எதிரானது’ என்ற கருத்துக்கள் விவாதப்பொருளாகி விட்டன. அத்துடன் ஆர்டிக்கிள் 35A பற்றியும் விவாதங்கள் நடக்கின்றன. ஆகையால் திண்ணைக் கச்சேரியிலும் இவைகள் பற்றிய சூடான கருத்துக்கள் வெளியிடப்பட உள்ளன. 1.    பங்களூரு சட்டக் கல்லூரியில் 7-8-2017 அன்று பேச்சின் முழு உரைக்கான தொடர்பு:  (மிகவும் நீண்ட சொற்பொழிவு – பட...

மோடியின் 71-வது சுதந்திர தின எழிச்சி உரை – புதிய இந்தியாவை அமைப்போம்!

Image
இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய திருப்பம் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற மஹாத்மாவின் அறைகூவலும், ‘பூர்ண சுதந்திரம் நமது பிறப்புரிமை’ என்ற லோகமான்ய திலகரின் முடிவுமாகும். இதனால், 1942-ஆண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகளில் நம் நாடு பூர்ண சுதந்திரம் அடைந்தது. 1942-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட உறுதிமொழியான ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற மக்களின் ஒட்டுமொத்த சுதந்திர தாகத்தின் சக்தி சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும். அதைப் போல் 70 ஆண்டுகள் இந்தியா சுதந்திரம் பெற்று பூர்த்தியாகிய நிலையில் வருகிற 75-வது சுதந்திர தினத்தில் வருகிற ஐந்து ஆண்டுகளில் புதிய பாரதத்தை 2022 ஆண்டுக்குள் உருவாக்க உறுதி மொழி எடுக்க இந்திய மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார் நமது பாரதப் பிரதமர் மோடி. ஊழலற்ற, தூய்மையான, ஏழ்மை அற்ற, தீவிரவாதமற்ற, ஜாதிவெறியற்ற, மதவாதமற்ற இந்தியாவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய இந்தியாவை 2022 ஆண்டிற்குள் உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை இந்திய மக்கள் எடுத்து அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு வித்திட்டுள்ளார் மோடி. தொலை நோக்குடன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக டீம் இந்தியா மூலம் ந...

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி – 14-08-2017 & ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி – 25-08-2017

Image
ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாகக் கொண்டாடப்படுகிறார். ஸ்ரீகிருஷ்ணன் மதுரா சிறையில் அடைக்கப்பட்ட வசுதேவர்-தேவகி தம்பதிகளுக்கு கி.மு.3228-ம் ஆண்டு 18-ம் நாள் ஜுலை மாதம் பிறந்தார். ஆகையால் இந்த 2017 வருடம் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி 5244-வது வருட கிருஷ்ண ஜெயந்தியாகும். அவரது பிறப்பு மூன்றாவது யுகமான துவாபர யுகத்தின் இறுதியாகக் கணிக்கப்படுகிறது. அதன் பிறகு கலியுகம் பிறக்கிறது. கிருஷ்ணனின் அவதாரத் தலம் மதுரா. மழலைப் பருவம் கோகுலம். பால்ய பருவம் பிருந்தாவனம். கம்ச வதம் மதுரா. குருகுலம் சாந்தீபனி ஆசிரமம் (உஜ்ஜையினி). அரசாட்சி துவாரகா. அவதாரம் நிறைவுற்றது பிரபாச க்ஷேத்திரம் (சோம்நாத்). ஸ்ரீகிருஷ்ணர் 126 வருடங்கள் 5 மாதங்கள் உயிர் வாழ்ந்து, கி.மு. 18-02-3102 அன்று வைகுண்டம் அடைந்தார். அவர் வேடுவன் ஒருவனின் விஷமுள்ள அம்பினால் காலில் தாக்கப்பட்டு தம் அவதாரத்தை முடித்துக் கொண்டார். அப்போது மாலை சுமார் இரண்டரை மணி என்று ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. வசுதேவரின் இன்னொரு மனைவி ரோகிணியின் வயிற்றில் கிருஷ்ணனுக்கு முன்ன...