Posts

Showing posts from March, 2017

பி.எஸ்.எடியுரப்பாவின் 10 கோடி ஊழலில் கோர்ட் தீர்ப்பு 2008

Image
வருடம் நடந்த கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பி . ஜே . பி . யை முதன் முதலாக ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர் என்ற பெருமை பி . எஸ் . எடியுரப்பாவிற்கு ஏற்பட்டு , அவரும் 30 மே 2008 முதன் மந்திரியாகப் பொறுப்பேற்றார் . ஆனால் , அவரது துரதிஷ்டம் சந்தோஷ் ஹெக்டே என்ற கர்நாடகாவின் லோகயுக்தா (2006- லிருந்து ஜூன் 2010 வரை பதவி வகித்தவர் ) மற்றும் அப்போதைய கர்நாடக கவர்னராக இருந்த எச் . ஆர் . பரத்வாஜ் ஆகிய இருவரின் மூலம் வந்தது .   பங்களூர் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கனிவளச் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது - நிலம் வாங்கியதில் முறைகேடு ஆகியவைகளை ஆய்வு செய்த அறிக்கையை ஏற்று பரத்வாஜும் எடியூரப்பாவின் மேல் வழக்குப் பதிவு செய்து , போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் உத்திரவிட்டார் . அதனால் , எடியுரப்பா 15-10-2011 அன்று கைதி செய்யப்பட்டு , 23 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு , விசாரிக்கப்பட்டுள்ளார் . பி . ஜே . பி . யின் அப்போதைய மேலிடம் அத்வானியின் சொல்படி , எடியுரப்பாவைக் காப்பாற்ற முயலவில்லை . சந்தேஷ் ஹெக்டேயிடம் அத்வானிக்கு ஒரு தனி நம்பிக்கை உண்டு என்பதை இங்கு க...

பிரசாந்த் கிஷோர் - பிஹார் விகாஸ் மிஷன் 2016 என்ற அமைப்பின் வழிகாட்டி:

Image
நிதிஷ் - லல்லு - ராகுல் கட்சிகளை ஒன்றினைத்து பிஹாரில் வெற்றிக் கனியைப் பறிக்க உதவிய கிஷோரை , அதற்குக் காணிக்கையாக பீஹார் முதல் மந்திரி நிதிஷ் குமார் பதவி ஏற்ற உடனேயே அவருக்கு மந்திரி பதவிக்கு நிகரான பதவியில் அவரை அமர்த்தி தமது நன்றிக் கடனை செலுத்தியதாக அப்போதே பத்திரிகைகளில் செய்தி வந்தது . அதன் தொடர்பாக ஜனவரி 2016 அன்று பிஹார் மந்திரிசபைக் கூட்டத்தில் பீஹார் விகாஸ் மிஷன் என்ற தனி அமைப்பை உருவாக்கி அதற்கு கிஷோரை தலைமை தாங்கி வழி நடத்த ஒப்புதல் பெறப்பட்டது . அந்த மிஷனின் முக்கிய நோக்கம் - பிஹார் மாநிலத்தில் நல்ல அரசாங்கம் - வளர்ச்சி ஆகியவைகளை அடைய ஐந்து வருட திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கத்திற்கு வழிகாட்டுவதாகும் . இதில் சுமார் 1500 கொள்கை - மற்றும் தொழில் வல்லுனர்கள் இடம் பெற்று , நிதிஷ் குமாரின் வளர்ச்சித் திட்டங்களை தீவிரப்படுத்துவார்கள் . இது ஒரு தனியான நிதிஷ் குமாரின் இன்னொரு அரசாங்க கிளைபோல் இயங்கும் . முக்கியமாக நிதிஷ் குமாரின் ஏழு அம்ச திட்டங்களை - இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம் , வேலையில் ஒதுக்கீடு மற்றும் பெண்கள் முன்னேற்றம் , அடிப்படை வசதிகளான மின்சாரம் ,...

ஆங்கில ஹிந்து தினசரியின் செய்தி வெளியிடுவதில் நிகழ்ந்த தவறுகள்

Image
ஆங்கில ஹிந்து தினசரி இதழ் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னிருந்தே - அதாவது 1889 வருடத்திலிருந்து வெளிவரும் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பத்திரிகையாகும் . 128 வருடங்களாக வெளிவரும் பத்திரிகை என்ற பெருமைகொண்ட தினசரி ஹிந்துப் பத்திரிகையாகும் . இத்தகைய பெருமை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகைக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஹிந்துவில் ஒரு செய்தி வெளிவந்தால் , அது அரசாங்க கெஜெட் போல் மிகவும் நம்பிக்கைக்கையானதாகவே பல வருடங்களாக புகழ் பெற்ற பத்திரிகையாகும் . இப்பொழுதும் மற்ற தினசரிகளை ஒப்பிடும் போது ஹிந்து தினசரியில் பெரும் குறைகளைக் காண முடியாது . ஆனால் , சமீபகாலமாக பல தவறான செய்திகளும் - தலையங்கங்களும் , தலைப்புகளும் இடம் பெறுவதை ஹிந்துவில் காணும் பொழுது , மனதிற்குச் சங்கடமாக இருக்கிறது . அதுவும் முஸ்லீம்களைப் பற்றிய செய்திகளிலும் , மோடியைக் கணிப்பதிலும் வெளிபடையாகத் தெரியும் தவறுகளைக் காணமுடிகிறது . அதை விளக்கவே இக் கட்டுரை . சமீபத்தில் லக்னோவில் ஒரு தீவிரவாதியான சய்ஃபுல்லா என்பவன் லக்னோவில் சுட்டுக் கொல்லப்...

மோடி-அமித் ஷா இரட்டையர்களின் வெற்றி

Image
தேர்தல் கணிப்புகள் - தேர்தலுக்கு முன்னால் நடத்திய கருத்துக் கணிப்புகளாகட்டும் , தேர்தல் நடந்த பிறகு நடத்திய ஓட்டுக் கணிப்புகளாகட்டும் - அனைத்தும் மஹா தவறாகி , பாரதிய ஜனதா கட்சி முக்கியமாக மிகவும் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்திலும் , சிறிய மாநிலமான உத்திரகாண்டிலும் ஹிமாலய வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது என்றால் மிகையாகாது .     உத்திரகாண்டின் காங்கிரஸ் முந்தைய முதல் மந்திரி ஹரீஷ் ராவத் போட்டி இட்ட ஹார்ட்வார் மற்றும் கிச்சா என்ற இரண்டு தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்து , அங்கு பி . ஜே . பி . அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் , காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது . இதுவும் பி . ஜே . பி . யின் மிகப்பெரும் சாதனையாகி விட்டது . பஞ்சாபில் அகாலிதளம் கூட்டணி ஆட்சியில் இருந்தும் , பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை அடைந்தாலும் , மற்ற இரண்டு மாநிலங்களான மணிப்பூர் (60 தொகுதிகள் ), கோவா (40 தொகுதிகள் ) ஆகியவைகளிலும் காங்கிரசுக்கு அடுத்த படியாக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது . அதுவும் முந்தை...