Posts

Showing posts from February, 2025

துடைப்பைக் கட்சியை தூசிபோல் தூக்கி எறிந்த டெல்லி ஓட்டர்கள்

Image
26 வருடக் காத்திருப்பிற்குப் பிறகு பிஜேபி டெல்லி சட்டசபையை ஆம் ஆத்மி கட்சியை வெற்றி கொண்டு கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. இது பிஜேபிக்கு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும்.   இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களில் வென்றாலும், அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலும் (சுமார் 4000 ஓட்டு வித்தியாசம்), அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மனிஷ் சிசோடியாவும் (சுமார் 600 ஓட்டுக்கள்) தோல்வி அடைந்துள்ளது கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவு என்பது மிகவும் கவலை தரும் விஷயமாகும்.   இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பாரதப் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள பிஜேபி கட்சி தலைமை அகத்தில் பேசியதின் சாராம்சம் : ' இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு முதன் முறையாக டெல்லி மற்றும் டெல்லியைச் சுற்றி உள்ள மாநிலங்களில் பிஜேபி அரசு உள்ளது . இதன் மூலம் டெல்லியை ஒரு சிறந்த உதாரண நகரமாக மாற்றி அமைப்போம் . பல ஸ்மார்ட் நகரங்கள் டெல்லியில் அமைக்கப்படும் . ஆப்டா (AAPda - பேரழிவு ) விலிருந்து டெல்லி மக்கள் தங்களைக் காப்பாற்றி உள்ளனர். ஆப்டா முக்த் என்ற நிலையை டெல்லியில் உண்டாக்கியதால் இனி ஊழலற்ற, வளர்ச...

மஹா சிவராத்திரி - 26 - 02 - 2025 - புதன் கிழமை

Image
 மஹா சிவராத்திரி என்றால் மிகவும் பெரிய - சிறப்பு மிக்க சிவராத்திரி என்று பொருள்.  இந்த நாளின் சிறப்பு: இந்த நாளில் தான் சிவ - பார்வதி கல்யாணம் நடந்துள்ளது. இதே நாளில் தான் சிவனின் ஊர்த்துவ தாண்டவம் அரங்கேறியது. அது மட்டுமல்ல. இதே நாளில் தான் சிவன் உலகம் காக்க ஆலகால விஷத்தை உண்ண, பார்வதி தேவி சிவனின் கழுத்தை தமது திருக்கரங்களால் பிடித்து அந்த விஷம் கழுத்திலேயே தங்கி, சிவனும் திருநீலகண்டராக புகழப்படுகிறார். அன்று ராத்திரி முழுவதும் கண் விழித்து சிவ - பார்வதியை பல தோத்திரங்களால் வணங்கி ஆலயங்களில் நடக்கும் பல கால அபிஷேக ஆராதனைகளைக் கண்டு பிரார்த்தித்து சகல விதமான நன்மைகளையும் அடைய வேண்டும் .   வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் கிட்ட சிவ-பார்வதியை இந்த நன்நாளில் பிரார்த்தித்து நலம் பெறுவோமாக.

ரத சப்தமி (4-ம் தேதி பிப்ரவரி மாதம் 2025 வருடம் - செவ்வாய்க்கிழமை)

Image
  ரத சப்தமி என்றும் மஹா சப்தமி என்றும் சூர்ய ஜயந்தி என்றும் கொண்டாடப்படும் இந்த தினம் சூரிய பகவான் தமது ஏழு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் அருண் என்ற கால்கள் இல்லாத ஒரு கண் படைத்த சாரதி தென் திசையிலிருந்து வட திசையை நோக்கிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. தக்ஷிணாயணத்திலிருந்து உத்திராயணம் திசையை நோக்கி சூரியனின் ரதம் செல்வதை இது குறிக்கும். மேலும் குளிர் காலம் நீங்கி, கோடை காலம் வருவதையும் இது தெரிவிக்கிறது. அறுவடைக் காலமும் இந்த உத்திரியாயணத்தின் போது தான் நடைபெறும்.   ரதம் என்றால் தேர். சப்தமி என்றால் ஏழு. ஆகையால் ரத சப்தமி என்றால் ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் என்று பொருள் படும். இந்த ரதத்தில் தான் சூர்ய பகவான் ஏழு லோகங்களைச் சுற்றி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஏழு குதிரைகளும் வான வில்லின் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. மற்றும் ஏழு என்பது வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கும்.   புராணத்தின்படி ரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி கர்ப்பவதியாக இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு , திறந்து பார...