Posts

Showing posts from November, 2024

இலக்கிய கதம்ப மாலை - விமரிசனம்

Image
  திரு. பி . ஆறுமுகம் என்ற என் நண்பர் நான் அனுப்பிய ' இலக்கிய கதம்ப மாலை ' என்ற என் புத்தகத்தை முழுவதும் படித்து அது குறித்து ஒரு நீண்ட விமரிசனம் ( என்னிடம் கொண்ட அன்பினால் அது ஒரு வாழ்த்துரையாக அமையும் வாய்ப்பும் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன் ) எழுதி எனக்கு தபால் மூலம் அனுப்பி உள்ளார் . அதை இங்கு பிரசுரித்து அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் . ஆறுமுகத்திற்கு என் நன்றிகள் பல . ஆசிகளோ அனந்தம் .   ஆசிரியர் : ஜயந்திநாதன்   இடது புறம் : பி . ஆறுமுகம் . வலது புறம் : ஆசிரியர் ஜயந்திநாதன் ( இடம் : திருவல்லிக்கேணியில் பாரதி நினைவு மண்டபம் )     பி . ஆறுமுகத்தின் விமரிசனக் கட்டுரை மடல் :   மதிப்பிற்குரியவர் அவர்களே ,  தங்களது இலக்கிய கதம்ப மாலை நூல் கிடைக்கப்பெற்றேன் . என் இதய பூர்வமான நன்றிகள் .  நூல் தொடர்பாகவும் , உங்கள் இளைய   பருவத்தில் மலர்ந்த மலர்களை மாலையாக்கி இலக்கிய தாகத்தினால் எழுத்தில் வடித்து இத்தனை நாள் பாதுகாத்து தமிழன்னையின் ...

மஹாராஷ்டிரா - ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்

Image
  மஹாராஷ்டிரா - ஜார்கண்ட் தேர்தல்  முடிவுகள்   -  மற்றும்   பல   மாநில இடைத்தேர்தல்கள்    முடிவுகள் 1. மஹாராஷ்ரா மாநில தேர்தல் முடிவுகள் :   மஹாரஷ்ராவில் பிஜேபி தலைமையில் மஹாயுதி - காங்கிரஸ் தலைமையில் மஹா விஹாஸ் அகாடி என்ற இரண்டு அணிகள் தேர்தலில் போட்டி இட்டதில் மாஹாயுதியின் சுனாமியில் மஹாவிஹாஸ் அகாடி மூழ்கி ஹிமாலயத் தோல்வியைத் தழுவி இது ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த பிஜேபி அணியின் வெற்றி என்று புகழும் நிலை ஏற்பட்டுவிட்டது .   இந்த சுனாமியில் மஹாராஷ்டிரா சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறும் தகுதியையும் கார்க்கே காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சர்த்பவார் தேசியவாத காங்கிரஸ் எந்த ஒரு கட்சிகளும் பெறத் தவறி விட்டன .    இதற்குக் குறைந்த பட்சம் மொத்த இடங்களில் 10% வெற்றி பெற்றிருக்க வேண்டும் - 29 சீட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும் . ஆனால் அந்த மூன்று கட்சிகளும் உத்தவ் 20, கார்கே 16, சரத்பவார் 10 என்று ஒரு கட்சியும் அந்த இலக்கை அடையாமல் சுனாமியி...

அரனுக்கு அன்னாபிஷேகம் - ஐப்பசி பெளர்ணமி நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை

Image
சிவனை அபிஷேகப் பிரயன் என்றும் , விஷ்ணுவை அலங்காரப்பிரியன் என்றும் சொல்லி வணங்குவர் பக்தர்கள் .   ஒவ்வொரு மாதமும் வரும் அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய பொருளால் சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் அல்லது ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி திதியை அடிப்படையாகக் கொண்டு சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் . அதன் படி திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு நவம்பர் 14- ம் தேதி - ஐப்பசி 28- ம் தேதி வரும் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய பொருளான அன்னம் அபிஷேகம் நடைபெறும் . ஆனால் மற்ற சிவன் கோயில்களில் ஐப்பசி மாதம் பெளர்ணமி திதி வரும் அடுத்த நாளான நவம்பர் 15- ம் தேதி - ஐப்பசி 29- ம் தேதி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும் .  அரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மற்ற பொருட்களால் செய்யும் அபிஷேகங்களை விடச் சிறப்பு மிக்கதாகும் .   அன்னம் பிராணமயம் என்பார்கள் .   சாம வேதத்தில் "அஹமன்னம் , அஹமன்னம் , அஹமன்னதோ” என்று கூறப் பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது....