Posts

Showing posts from February, 2024

BAPS – ஹிந்து கோயில் அபுதாபி

Image
  அபுதாபியில் மோடியின் புனிதமான திருக்கரங்களால் திறக்கப்பட்ட கோவில்  “ BAPS - (Bochasanwasi Akshar Purushottam   Swaminarayan Sanstha) ஹிந்து கோயில் அபுதாபி” என்று பெயர் பெற்றுள்ளது. இது ஸ்ரீ ஸ்வாமி நாராயணருக்கான கோயிலாகும்.   BAPS என்பது ஒரு சமூக ஆன்மீக ஹிந்து மதக் கொள்கைகளைப் பரப்ப உருவான சத் சங்கமாகும். ஹிந்து மதத்தின் அடித்தளமாக விளங்கும் நான்கு வேதங்கள் தான் அந்த சங்கத்தின் கொள்கையாகும். ஹிந்து மதத்தைப் பரப்ப, அதன் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முதல் குருவான பகவான் ஸ்வாமிநாராயணன் (1781 – 1830) 18-வது நூற்றாண்டில் மக்களிடம் உபதேசித்தார். அதன், பிறகு சாஸ்திரிஜி மஹாராஜ் (1865 – 1951) அவர்களால் 1907 ஆண்டு இந்த பாப்ஸ் சன்ஸ்தா உருவாக்கப்பட்டு ஹிந்து மக்களின் உருவ வழிபாட்டிற்கும், ஹிந்துமதச் சடங்குகள் செய்வதற்கும் உதவும் விதமாக இந்தியா மற்றும் பல உலக நாடுகளில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அபுதாபியில் மோடியின் முயற்சியால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது தான் இந்த பாப்ஸ் அபுதாபி இந்துக் கோயிலாகும். கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்து கோவில் கட்டுவது க...

மஹா சிவராத்திரி 8ம் தேதி மார்ச் 2024 – வெள்ளிக் கிழமை

Image
மஹா சிவராத்திரியின் மஹிமைகள் பலவிதமாக பல புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்கா புராணம், பத்ம புராணம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம். மஹா சிவராத்திரி என்பது சிவனுக்கு உரிய பெரிய இரவு – என்று பொருள் கொண்டு, இந்த நாள் சிவ-பார்வதியரின் முதல் இரவு என்று கொண்டாடப்படுகிறது. சைவ மதத்தினர் இந்த நாள் சிவன் ஊர்த்துவ தாண்டவமாடி தனது செயல்களான ஜீவராசிகளின் பிறப்பு, காப்பு, இறப்பு ஆகியவைகளைக் குறிக்கும் என்பவர். தவசிகள் சிவனை யோக மஹா குருவாக நினைக்கின்றனர். சிவன் தான் உலகத்தினர் அனைவருக்கும் ஆதி குரு என்று துதிக்கப்படுகிறார். சிவன் பல நூற்றாண்டுகள் யோக நிலையில் இருந்து சிவனே கைலாச மலையாக நிலையாக அசைவற்று மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கைலாச மலையையே சிவனாக வழிபடுவது ஹிந்து மதமாகும். சமுத்திரத்தைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஆலஹால விஷத்தை உலக நன்மைக்காக விழுங்கி, அன்னை பார்வதி தேவியின் அருளால் அந்த விஷம் சிவனின் தொண்டையிலேயே நின்று உலகம் உய்ந்தது என்பது புராண வரலாறு. அந்த சிவன் விஷம் உண்ட நாளும் மஹா சிவ ராத்திரியாகும் என்பதும் ஒரு வரலாறு. ராத்ரம் என்ப...

ரத சப்தமி – 16 -2 – 2024 – வெள்ளிக்கிழமை

Image
ரதம் என்றால் தேர். சப்தமி என்றால் திதி என்று பெயர். இந்த நாள் தான் சூர்யபகவான் அவதரித்த திரு நாளாகும். ஆகையால் இந்த நாள் சூரிய ஜயந்தியாகும். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சூரிய பகவான் உலகத்தைச் சுற்றி பன்னிரண்டு ராசிகளையும் கடந்து வருகிறார். அந்தக் குதிரைகள் ஏழு வர்ணங்களகவும், ஏழு நாட்களாகும் உருவகிக்கப்படுகிறது. ஏழு குதிரைகளும் வெள்ளை நிறத்தவைகள் என்றும் சொல்லப்படுகிறது. அந்த அவரின் தேருக்கு சாரதி அருணா.  சூரியபகவான் தன் அவதார தினத்தில் தன் ரதத்தை வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். அது உழவர்களின் அறுவடை நேரமாகும். மேலும் வசந்த காலத் தொடக்கமும் ஆகும். பாரத போரின் போது போர்க்களத்தில் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர் , தன்னுடைய உயிர் பிரிவதற்கு உத்திராயண காலம் வருவம் வரை காத்திருந்தார் . உத்திராயணம் காலம் வந்த பிறகும் அவரது உயிர் , உடலை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது . இதற்கு காரணம் புரியாமல் தவித்த பீஷ்மருக்கு விளக்குவதற்காக கிருஷ்ணர் அருளால் வியாசர் அங்கு வருகிறார் . அவர்   ரத சப்தமி வழிபாடு பற்றி பீஷ்மருக்கு விள...