Posts

Showing posts from March, 2021
Image
  மம்தா பானர்ஜியின் அரசியல் என்றால் அதில் அதிரடி திருப்பங்களும், அராஜக அடாவடிகளும், அரசியல் கொலைகளும், அனல்பறக்கும்   சவால்களும் நிரம்பி வழியும். அவைகள் தான் அவரது பலமும், பலவீனமும் ஆகும். அவர் காங்கிரசில் இருந்த போதும் சரி, காங்கிரசிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி பல ஆண்டுகளாக கோலோட்சிய இடது சாரிக் கட்சிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் முதன் மந்திரியாக ஆட்சி செய்து, இப்போது மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தன் முழுப் பலத்தையும் காட்ட தேர்தல் களத்தில் உள்ள போதும் சரி, மம்தாவின் அணுகுமுறையில் அதிக மாற்றமில்லை என்பது தான் சரியான கணிப்பு.   மம்தாவை இப்போது 3 இடங்களே சென்ற 2016 ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பெற்ற பிஜேபி எதிர்த்து ஆட்சியை அவரிடமிருந்து பறிக்க முயலுகிறது. காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகளும் மம்தாவுக்கு எதிராக களம் காண்கின்றனர் என்றாலும், சென்ற லோக் சபாவில் 2 எம்பிக்கள் என்பது 18 எம்.பி.க்களை வென்ற பிஜேபி தான் முக்கிய கட்சியாக தேர்தல் களத்தில் உள்ளது. மம்தாவின் திருணமுல் காங்கிரஸ் தனது 34 எம்.பி...

ரத சப்தமி – 19 – 02 – 2021 – வெள்ளிக் கிழமை

Image
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம். ரத சப்தமி நாளில் சூரியன் பிறந்ததாக கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினத்தை சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.   சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகு 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு (19.02.2021) வெள்ளிக்கிழமையன்று ரத சப்தமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.   அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.   ரத சப்தமி ஸ்னான சுலோகம்  

காரடையான் நோன்பு – 14 – 03 – 2021 (ஞாயிறு)

Image
  காரடையான் நோன்பு என்றால் கார் அடை நிவேதனம் செய்து அம்பாளைப் பிரார்த்தனை செய்வது என்பது பொதுவான விளக்கம். ஆனால் கார் + அடையான் என்பதில் கார் என்றால் இருள் சூழ்ந்த எமலோகம் என்றும், அடையான் என்றால் அதை அடையாமல் இருக்கும் நோன்பு என்றும் பொருள் கொள்ள வேண்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் கல்யாணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.   மேலும் இந்த விரத நாள் சூரியபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சுப முகூர்த்தத்தையும் இது குறிக்கும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் இந்த நோன்பு நூற்கப்படுகிறது.   மந்திரதேசத்து மன்னன் அசுவபதிக்குப் பிறந்த குழந்தை தான் சாவித்திரி. சாவித்திரியைப் பார்த்த நாரதர் ‘இவள் பெற்றோரைத் தெய்வமாக மதிக்கும் யுவனை மணந்து கொள்வாள். ஆனால் அவனது  ஆயுட் காலம் 21 ஆண்டுகள் மட்டும் தான்’ என்று சொன்னார். தந்தை  கவலைப் பட்டாலும், சாவித்திரியே தன் கணவனைத் தேர்வு செய்ய  அனுமதித்தார். சாளுவ தேசத்து மன்னன் துயமத்சேனன் ஆட்சி மற்றும்  கண் பார்வை இழந்து, தன் மகன் சத்தியவான், மனைவ...