பீஹார் சட்ட சபைத் தேர்தல் முடிவு – 10 – 11 – 2020

பீஹார் தேர்தல் மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சென்ற 2015-ம் ஆண்டுத் தேர்தலில் மோடி 2014 பிரதமராக ஆனதை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, 2015 ஆண்டுத் தேர்தலில் தனது பரம எதிரியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் மெஹா கூட்டணி அமைத்து காங்கிரசுடன் சேர்ந்து 71 இடங்களில் அமோக வெற்றி பெற்று முதன் மந்திரியானார். ஆனால் துணை முதலமைச்சராக இருந்த லல்லுவின் இளைய மகன் ராஜேஸ்வி யாதவின் தலையீடு காரணமாக மீண்டும் 53 இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. உடன் சேர்ந்து ஒரு வருட லல்லு கட்சியுடன் உள்ள உறவை உதறித் தள்ளி மீண்டும் ஆறாவது முறையாக – மூன்றாவது தொடர் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு முதன் மந்திரியானார். ஆகையால் 2005, 2010, 2015 & 2020 என்று நான்கு சட்டசபைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இப்போது ஏழாவது முறையாக முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார். பீஹாரில் 18 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் கிருஷ்ண சின்ஹா. தற்போது முதல்வராக 14 ஆண்டுகளுக்கு மேல் இருந...