Posts

Showing posts from August, 2019

05-08-2019 - திங்கட் கிழமை - இந்திய சரித்திரத்தின் பொன்னான நாள்

Image
05-08-2019 – திங்கட் கிழமை – இந்த நாள் இந்திய சரித்திரத்தில் ஒரு பொன்னான நாளாகும். அன்று தான் ஆர்ட்டிகிள் 370 இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீர்த்துப் போகச் செய்த அற்புதத் திருநாளாகும். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் தனித் தன்மை – தனி அரசியல் சட்டம் - தனிக் கொடி – என்பது ஒரு தற்காலிக நிலை என்று சொல்லி இந்திய மக்களை ஏமாற்றிய காங்கிரஸ் – மற்றும் சில எதிர்க்கட்சிகளின் கபட நாடகத்தை அசுர வேகத்தில் மோடி – அமித்ஷா ஆகியவர்கள் பார்லிமெண்ட் – ராஜ்ய சபா ஆகிய இரண்டு சபைகளிலும் இரு தினங்களில் – 5 & 6 ஆகஸ்ட் 2019 – நீண்ட நேரம் விவாதித்து, 2/3 அங்கத்தினர்களின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றி வெற்றி வாகை சூடி உள்ளார்கள். இது சாதாரண சாதனை இல்லை. 30-07-2019 அன்று முத்தலாக் தடைச் சட்டம் இரு சபைகளிலும் நிறைவேற்றி சாதனை படைத்த மோடி அரசு அதே வேகத்தில் பி.ஜே.பியின் நெடுநாளைய கனவான 370 நீக்கத்தையும் நிறைவேற்றி எதிர்கட்சிகளை நிலை குலைய வைத்துள்ளது. முதலில் ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 5-ம் தேதியில் 370 & 35 A ஷரத்துக்கள் ரத்தான மசோதாவிற்கு 125 பேர்கள் ஆதரவாகவும், 61 பேர்கள் எத...

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை

Image
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தன்று கிருஷ்ண ஜெயந்தி எனும் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகின்றது .  இந்தாண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி வருவதால் , அன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்பட் உள்ளது .  அந்த புனிதமான நாளில் கிருஷ்ணரின் காயத்திரி மந்திரம் ஜெபித்தால் அபிரிமிதமான பலன் உண்டு. கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் : ஓம் தேவகிநந்தனாய வித்மஹே ,  வாசுதேவாய தீமஹி ,  தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத் .  கிருஷ்ணன் அருளிய கீதை ஒரு அற்புதமான புனித இந்து தர்மத்தைப்  போதிக்கும் பக்தி நூலாகும். அவரது பிறந்த நாளில் அந்த நூலை  அனைத்து இந்து மதத்தினரும் பாராயணம் செய்ய முடிவெடுத்து தினமும் சில ஸ்லோகங்களை பக்தியுடன் படிக்க வேண்டும்.  அதன் பொருளை அறிந்து ஓதுவது இன்னும் சாலச் சிறந்ததாகும். கீதை  வேதத்திற்கு ஈடாகப...

விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை

Image
விநாயகர் சதுர்த்தி – 02-09-2019 – புதன் கிழமை விக்னம் போக்கும் விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 2-ம் தேதி புதன் கிழமை வருகிறது. இந்தியா முழுவதும் இந்த விநாயகர் பிறந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தத் தருணத்தில் மஹா கவி பாரதியின் கவிதையை நாம் இங்கு நினவு கொள்வோமாக: புகழ்வோம் கணபதி நின் பொற்கழலை நாளும் திகழ்வோம்   பெருங்கீர்த்தி சேர்ந்தே – இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்; ஈங்கிதுகாண் வல்லபைகோன் தந்த வரம். கணபதியின் வரம் பெற்ற நாம் இந்து மதத்தை இகழும் புல்லரக்கப் பாதகரின் பொய்கள் அனைத்தையும் இகழ்ந்து நமது சனாதன மதமான ஹிந்து மதத்தையும், அதன் உன்னதமான சடங்குகளையும் முறைப்படி அனுசரித்து, வீட்டையும் நாட்டையும் நலம் பெறச் செய்வது அந்த வல்லபைகோன் நமக்குத் தந்த வரமாகும்.  வீடும், நாடும், நாமும் செழிக்க கணநாதனின் பாதங்களை நினைத்து வணங்குகுவோம் வாரீர்.