Posts

Showing posts from 2019

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 – Citizenship Amendment Act (CAA) - 2019

Image
குடியுரிமைச் சட்டம் இந்தியா சுதந்திரம் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955- ல் நிறைவேற்றப்பட்டது . இந்தியக் குடிமகன் என்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 1- ல் – 5- லிருந்து 11- வரையிலுள்ள ஆர்ட்டிகிள் வரையறை செய்யும் . அதற்கான விரிவான விதிகள் குடியுரிமைச் சட்டம் 1955- ல் காணப்படும் . இந்தச் சட்டம் 1986, 1992, 2003, 2005 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறைகள் திருத்தப்பட்டுள்ளன . இப்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தம் 2019 அந்த குடியுரிமைச் சட்டத்தின் ஐந்தாவது திருத்தமாகும் . ஆகையால் இது ஏதோ மோடி அரசால் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டம் போல் சித்திரிக்கப் படுவது தவறு . மேலும் 2003- ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்திருத்தம் ( இரண்டாவது திருத்தம் ) இந்திய குடிமக்களின் தேசிய பதிவு ஏடு (National Register of Citizens – NRC) இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் . அதை அஸ்ஸாமில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 அடிப்படையில் இந்த இந்திய குடிமக்களின் தேசியப்பதிவு நடத்தபட 2005 வருடத்தில் அப்போதைய அரசு உறுதி அளித்தும் அந்தச் செயல் சரிவர...

மார்கழி மஹாத்மியம் – வீதிகளிலும் வீடுகளிலும் நாம சங்கீர்த்தனம்

Image
மார்கழி மாதம் பக்திப் பரவசம் கொள்ள வைக்கும் மாதம் . ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் ‘ மாதங்களில் நான் மார்கழி ’ என்று அந்த மாதத்தினைப் போற்றுகிறான் . மார்கழியில் பனிப் பொழிவு அதிகம் . குளிரினால் அதிகாலையில் துயில் எழுவது சிரமம் . இருப்பினும் அதிகாலையில் துயில் எழுந்து இறைவன் துதிபாடுவது உடலுக்கு வலு சேர்க்கும் என்கிறது அறிவியல் . மார்கழியில் பனி பெய்வதால் , நம்மைச் சுற்றி ஆக்ஸிஜன் சற்றுக் குறைவாக இருக்கும் . அதோடு பனிக் குளிரால் தொண்டை வறண்டு இருமல் , சளி , ஜலதோஷம் , தொண்டைக் கட்டு ஆகிய உபாதைகள் உண்டாகும் . கைகளைத் தட்டியவாறு , உரத்த குரலில் பகவான் திருநாமங்களைச் சொல்லி பஜனைப் பாடல்களைப் பாடும் போது நுரையீரல் நன்கு விரியும் ; சுவாசம் சுலபமாகும் . தேவையான அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கவும் முடியும் . இது ஆண்களுக்கு என்றால் , அதிகாலையில் குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது , நெய் விளக்கு ஏற்றுவது ஆகிய செயல்களால் பெண்களுக்கும் அதே பலன்கள் கிட்டும் . மேலும் மிளகு சேர்ந்த பொங்கல் பிரசாதம் , துளசி தீர்த்தம் ஆகியவைகள் எல்லாம் சளி போன்றவற்றிற்கு ஒளஷதமாகும் . இந்தக் காரணங...

காவிக்காவியமா திருக்குறள்?

Image
காவிக்காவியமா திருக்குறள் ? ஆக்கம் : பவித்திரன் திருவள்ளுவர் காவியை மதிக்கும் ஹிந்துவா ? என்பதை அவரது திருக்குறள்கள் மூலம் நிரூபிப்பது என்பது கடினமான காரியம் ஒன்றும் இல்லை . அதைவிட திருக்குறள் ஒரு காவிக்காவியம் – ஹிந்துமதத்தின் கொள்கைகளை ஏற்கும் சிந்தனைகளையும் , சிந்தாந்தங்களையும் தன்னடத்தே கொண்ட பல குறட்பாக்களைக் கொண்ட காவியம் என்பதை நிரூபிப்பதும் மிகவும் சுலபமான ஒன்று தான் . ஆகையால் , திருவள்ளுவரை சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு ஹிந்துவாக – கடவுளை முழுமனதுடன் நம்பும் ஹிந்துவாக – அதில் விதிக்கப்பட்டிருக்கும் – தவம் , ஊழ் , மறுபிறவி , சொர்க்கம் , நரகம் , அழிவற்ற ஆத்மா , ஏழு பிறவி , யாகம் , துறவு , நிலையாமை , பிறவாமைஆகிய தத்துவங்களை குறிக்கும் குறட்பாக்கள் இருப்பதாலும் , ஹிந்துக் கடவுள்களான விஷ்ணு , லட்சுமி , யமன் , உலகளந்த வாமனன் , இந்திரன் , திருவடி தொழுதல் , வானோர் , அந்தணர் , தாமரைக் கண்ணான் ( திருமால் ) ஆகியவர்களை திருக்குறளில் விளக்கப்பட்டிருப்பதாலும் - ஏற்பது தான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் தர்மம...