Posts

Showing posts from June, 2018

திண்ணைக் கச்சேரி

Image
பொதுஜனம்: மோடி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டாலும், மோடியை வருகிற 2019 லோக் சபா தேர்தலில் மீண்டும் வெற்றி அடையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டி போட வியூகம் வகுத்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நகர மாவோயிஸ்டுகள் – நக்சலைட்டுகள் ஒன்றாகத் திட்டம் போட்டது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீமா கோரேகாவுங் என்ற இடம் மஹாராஷ்ரா பூனாவில் உள்ளது. அந்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பனி மாஹர் என்ற தலித் இனத்தவர்கள் பங்கேற்று பேஷ்வா பைஜிராவ் II என்ற பிராமண இனத்துக் குறுநிலமன்னரை 1818 ஆண்டு வெற்றி பெற்றதற்கு அடையாளமாக நிறுவி உள்ளனர். அம்பேத்கர் அந்த வெற்றித் தூணை முதல் முதலாக 01-01-1927 அன்று பார்வை இட்டு, உரையாற்றிச் சொன்னார்:”மாஹார் என்ற தீண்டத்தகாதவர்களாக தலித்துக்கள்தான் ஆங்கிலப் படையில் சேர்ந்து   பெஷாவர் உயர் குடிப்பிரமண இனத்தவர்களை வென்றுள்ளனர்’” இதன் மூலம் அம்மேத்கர் இந்த வெற்றித் தூண் தலித் இனத்தவர்களின் உயர் ஜாதியினரின் தீண்டாமைக் கொள்கைக்கு எதிராக போராடி வென்ற ஒரு வெற்றிச் சின்னம் என்பதாகத் தெரிவ...

மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பரிணாமத்தின் சில துளிகள்

Image
எதைச் செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை சமாளித்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பலவிதத்திலும் முயன்று வருகிறார் மோடி. அதில் பல வெற்றியும் பெற்றுள்ளார் என்பதற்கு நான்கு திட்டங்கள் பற்றி உங்களிடம் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வது தான் இந்த மாத தலையங்கத்தின் நோக்கம்.     இந்திய விண்வெளி ஆராட்சி நிலையம் ANTRIX என்ற தனது கிளை நிறுவனத்தின் மூலம் 2014-லிருந்து நான்கு ஆண்டுகளில் 200 அயல் தேசத்துச் செயற்கைக் கோள்கைகளை விண்ணில் செலுத்தி ரூபாய் 700+ கோடி லாபம் ஈட்டியது பற்றிய தகவல். இந்திய விண்வெளி ஆராட்சி நிலையத்தின் கிளையான விக்ரம் சராபாய் விண்வெளி நிலையம் உருவாக்கிய லித்தியம் அயனி மின்கலம் ( lithium-ion) என்ற பாட்டரி செல் டெக்னாலஜியை மேக்-இன்-இந்தியாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கூடங்களுக்கு அவைகளை மேம்படுத்தவும், சந்தைப் படுத்தவும் விற்று லாபம் சம்பாதிப்பதுடன் மாசற்ற சூழ்நிலைக்கு உதவும் செய்தி பற்றிய விளக்கம். பம்பை குர்லா ரயில்வே கூடத்தில் மழைகாலத்தில் 12 அங்குலம் தண்ணீரிலும் செல்லும் சக்தி கொண்ட Water Proof Engine-யை உருவாக்கி வெற்றி க...

சத்தியமேவ ஜெயதே! #ModiWin2019

Image
2019- ல் மோடி மீண்டும் பிரதமராகாமல் இருக்க மசூதி-சர்ச் ஆகியவைகளில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அவைகளை செக்குலர் கூட்டங்கள் கண்டு கொள்வதும் இல்லை; கண்டிப்பதும் இல்லை. உண்மையில் அவைகளை ரகசியமாக ஆதரிப்பதாகவே படுகிறது. மேலும் மசூதிப் போதகர்கள், சர்ச் பாதிரிமார்கள் ஆகியவர்கள் தேர்தலின் போது நேரிடையாகவே எந்தவிதமான பயமும் இன்றி, தேர்தல் விதிமுறைகள் – இந்திய அரசியல் சட்ட நடைமுறைகள் ஆகியவைகளையும் புறம்தள்ளி மோடிக்கு எதிராக ஓட்டுப் போடும்படிப் பிரசாரம் செய்வதும் இப்போது முன்பை விட அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதை அனைத்தையும் பெரும்பான்மையான இந்துக்கள் உணருவதாக இல்லை. திண்ணை வேதாந்தம், சங்கப்பரிவார் கூட்டம், வலது சாரிக் கொள்கையினர் – என்று நம்மை நாமே இகழ்ந்து, ஒற்றுமையை இழந்து, குழம்பித் தவிக்கிறோம். இந்தியாவின் உண்மையான இருதயமான ஹிந்துமதக் கொள்கையான – எம்மதமும் சம்மதம் – என்பதை இந்துக்களாகிய நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பெருமையாகக் கொள்கிறோம். ஆனால் மற்ற மதத்தினர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் – கிருஸ்துவர்கள் – ஏன் கடைப்பிடிக்காமல் ...