Posts

Showing posts from January, 2018

நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உச்சமான அவலக்குரல்

Image
(இடமிருந்து வலம்: குரியன் ஜோசப், சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி. லோகுர் – இடம்: சலமேஸ்வர் வீடு நாள்: 12-01-2018) சுதந்திரம் அடைந்த இந்தியாவில் நீதிமன்றத்தின் மிகவும் இருண்ட நாள் என்றால் அது 12 – 01 – 2018 என்று சரித்திரம் பதிவு செய்து விட்டது. இது அதை நிகழ்த்திக் காட்டிய உச்ச மன்ற நீதிபதிகளான அந்த நான்கு பேர்களுக்கும் – சலமேஸ்வர், கோகோய், ஜோசப், லோகுர் – எந்த விதத்திலும் பெருமை சேர்க்காது என்பதுடன், ‘சட்ட விதிமுறைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்’ என்ற அடிப்படைத் தத்துவத்தையே உச்ச மன்ற மூத்த நீதிபதிகள் மக்கள் மன்றத்தில் குரல் எழுப்பி தூள்தூளாக்கி விட்டனர்.  அவர்களின் அவலக் குரல் கேட்டு இந்தியாவே அதிர்ந்து விட்டது. அதிலிருந்து இந்தியா மீண்டாலும், அவர்கள் ஏற்படுத்திய ரணம் தீராத வியாதியாகி உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மையையே சந்தேகிக்கும் நிலைக்குத் தள்ளி விட்டது. அந்த மூத்த நான்கு நீதிபதிகள் கடந்த ஒரு வருடமாக நடந்த விதம், அவர்கள் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு அக்டோபர் 2017 அன்று எழுதிய கடிதம் ( மீடியா பேட்டியில் அந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது ), குறி...

வைரமுத்துவின் ஆண்டாள் அவதூறு

Image
டாக்டர் பார்த்தசாரதி பட்டர் தமது முகநூலில் வைரமுத்து தமது ‘தமிழை ஆண்டாள்’ என்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பிரசுரித்த கட்டுரையில் பல விஷயங்கள் தவறானவைகளாக இருப்பினும், முக்கியமாக ஆண்டாள் நாச்சியாரை அவதூறாக – தேவதாசி குலம் – என்று குறிப்பிட்டுள்ளது அபாண்டம் – அபத்தம் என்பதை வைரமுத்து மேற்கோள் காட்டிய குறிப்பிலிருந்தே நிரூபித்துள்ளார். அது தான் அதன் சிறப்பு. இந்தப் பதிவினை வாய்மை ஆரம்பித்த காலத்திலிருந்தே விஷயதானங்கள் அளித்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் திரு. எஸ். பலராமன் எங்களுடன் பகிர்ந்துள்ளார். அதன் மின்வலைத் தொடர்பு: https://www.facebook.com/parthasarathybhattar/videos/10210835514020482/ பார்த்த சாரதி பட்டர் பேசிய பேச்சினை இங்கு உங்கள் வசதிக்காக குறிப்பிடுகிறோம். அவர் மிகவும் சாந்தமாக – அதே சமயத்தில் மிகவும் அழுத்தமாக – “வைரமுத்து மேற்கோள் ஹிமாலயத் தவறு” என்பதை அவர்து கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார் என்பது இதன் சிறப்பாகும்.  அவர் மேற்கோள் காட்டும் கட்டுரையின் தலைப்பு – Bhakti Moment in South India by MGS Narayanan...

ரவுத்ரம் பழகு

Image
நான்கு வேதங்கள், பல உபநிஷத்துக்கள், இதிகாச புராணங்கள், அற்புதமான தர்மத்தை உபதேசிக்கும் இலக்கியங்கள், ராமாயணம் – மஹாபாரதம் போன்ற காவியங்கள், மனுஸ்ருதி போன்ற வழிகாட்டு விதிகள் என்று ஹிந்து மதம் என்ற ஸனாதன தர்மம் மிகவும் வலுவான அஸ்திவாரம் கொண்டது. அர்த்த சாஸ்திரம் போன்ற ராஜ நீதிக்கு வழிகாட்டும் உன்னதமான விதிகளைக் கூறும் நூல்கள் பல, ஹிந்து மதத்தின் – பாரத கண்டத்தின் மேன்மையை உலகத்திற்குப் பறை சாற்றிய வண்ணம் மிளிர்கின்றன. அத்துடன் இந்தியாவின் பல மொழிகளில் பாசுரங்களும், பாடல்களும் ஹிந்துமதத்தையும் பக்தி மார்க்கத்தையும் தர்மத்தையும் ஆத்ம சிந்தனைகளையும் இன்னும் வலுவடையச் செய்துள்ளன. தமிழ் மொழியின் வளர்ச்சியும், சக்தியும் அதன் பக்தி இலக்கியத்தில் தான் வேரூன்றி இருப்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதில் வைஷ்ணவ ஆழ்வார்களின் பாசுரங்கள் சிறப்பானவை. அதில் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை தமிழுக்கு ஒரு சிறந்த அணிகலனாகும். மேலும் ஆண்டாளின் பெருமாள் பக்தி – சூடிக் கொடுத்த சுடர்கொடி – கோதை நாச்சியார் – என்று கோயிலில் வணங்கும் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறார். கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்...