Posts

Showing posts from March, 2016

யமுனா நதிக்கரையில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் உலக கலாச்சார திருவிழா

Image
இந்திய கலாச்சாரம் என்பது மதம் , பக்தி , சங்கீதம் , நாட்டியம் , நாடகம் , பஜனை , பாடல்கள் என்று பலவிதமான பரிமாணங்களாக விரிந்து , பலவித வேற்றுமைகளிலும் ஒற்றுமையை உலகத்திற்கே பறைசாற்றி வருகிறது . ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலையின் 35- வது ஆண்டு பூர்த்தியானதைக் கொண்டாட அதை உலக கலாச்சார திருவிழாவாக மிகவும் பிரமாண்டமாக நமது நாட்டின் பல கலாச்சாரக் குழுக்களுடன் , 155 தேசங்களிலிருந்து 33,000 கலைஞர்கள் பங்கேற்றுள்ளார்கள் . 1000 ஏக்கர் விஸ்தீரணமுள்ள யமுனா நதிக் கரையின் சமவெளிப்பரப்பில் 7 ஏக்கர் அளவில் மிகவும் பிரம்மாண்டமான மேடை அமைத்து விழா கோலாகலமாக மார்ச் 11 லிருந்து 13 வரை எந்தவிதமான அசம்பாவிதங்களும் நிகழாமல் வெற்றிகரமாக நடந்தேறி உள்ளதை ஒவ்வொரு தேசபக்தி உள்ள இந்தியனும் பெருமை கொள்ளலாம் . அதில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கையே 35 லட்சம் என்று கணக்கிடப்படுகிறது . அத்துடன் நம் மற்றும் பல நாட்டைச் சேர்ந்த 8,000 வாத்தியக்காரர்களுடன் , தெற்கு அப்பிரிக்காவிலிருந்து பங்கேற்ற 650 முரசு வாத்தியக்காரர்களும் இந்த விழாவினைச் சிறப...

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Image
நெஞ்சு பொறுக்குதில்லையே! வாய்மை என்ற மின் அஞ்சல் பத்திரிகையில் ஆகஸ்ட் மாதம் 2009 அன்று  வெளியான தலையங்கம் தான் கீழே பிரசுரமாகி உள்ளது.  ‘ பேச்சு சுதந்திரம்’, ‘தேசபக்தி’, ‘சகிப்புத் தன்மை இல்லாமை’, ‘தேசத் துரோகம்’, ‘மத நிந்தனை’ - ஆகிய சொற்களுக்கு புதிய விளக்கங்களும், விநோதமான விவாதங்கள் - கோஷங்கள், போராட்டங்கள் - கைதுகள் என்று இந்தியாவில் சில இடங்களில் நித்திய நிகழ்வுகளாகவும், மீடியா - பத்திரிகைகளில் செய்திகளாகவும் வருகின்ற இந்த நேரத்தில் இதைப் படிப்பது அவசியம்.  இதை அனைத்து  மாணவர்களும் படிக்க வேண்டுகிறேன். பேச்சுச் சுதந்திரம் என்ற கூச்சலில்  இந்தியாவின் சுதந்திரத்தையே இழக்க அவர்கள்  அறியாமலேயே  அஞ்ஞானத்தால் தவறான பாதையில் செல்வதை உணர்ந்து, திருந்தி,  ‘இந்தியா தான் என் உயிர் மூச்சு, இந்தியக் கொடிதான் என் உயிர்’  என்ற உயர்  நோக்கத்தை உள்ளத்தில் இருத்தி, உறுதியுடன் இருக்க வேண்டும். ஹிந்து  மதத்தை மதிக்காவிடினும் தவறில்லை. மதம் மாறினாலும்  தவறில்லை.  ஆனால், இந்தியனாக இருப்பதில் எந்தவிதமான கு...

நெஞ்சு பொறுக்குதில்லையே!

Image
யாராலேயும் 15- ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1947 நாளை மறக்க முடியுமா ? இந்தியா சுதந்திரம் பெற்று நமது தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டு , நாடு முழுதும் அந்தக் கொடி பறக்க விடப்பட்டு , நாடு சுதந்திரம் அடைந்த நன்நாள் அன்றோ! கல்கத்தாதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதல் தலைநகரம் என்பது சரித்திரம் சொல்லும் உ ண்மை. ஆனால் , இப்பொழுது வேறு ஒரு உ ண்மையையும் சொல்லப் போகிறேன். அது தான் இது: கொல்கத்தாவில் மெட்டியாபிரஸ் இமாம்பரா என்ற புகழ் பெற்ற கட்டிடத்தில் யூனியன் ஜாக் என்ற ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பறந்தது. அந்த ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதங்திரம் பெற்றும் 27 வருடங்கள் பறந்த பிறகு , 26 ஜனவரி 1975 அன்று தான் அகற்றப்பட்டு , அந்தக் கட்டிடத்தில் நமது மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன சாட்சி என்று நீங்கள் கேட்கலாம் ? காங்கிரஸ் ஆட்சிதானே - அதுவும் காங்கிரசில் மிகவும் செல்வாக்குள்ளவர்களான திருவாளர்கள் பி.சி. ராய் , பி.சி.சென் , அஜாய் முகர்ஜி , பி.சி.கோஷ் போன்றோர்கள் தானே அங்கு முதல் மந்திரி பதவியில் இருந்திருக்கின்றனர்....