அணு உலை மின்சார உற்பத்தி அவசியமா ? ஆபத்தா ?
புரபசர் ஹான்ஸ் - பீட்டர் டுயர் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவர் ஜெர்மனியின் நோபல் பரிசு பெற்ற அணுமின் பெளதிக விஞ்ஞானி. அவர் அணுமின் ஆய்வுத்துறையில் 40 ஆண்டுகளாக தம்மை அர்பணித்துள்ளார். நமது அணு விஞ்ஞானியான மதிப்பிக்குரிய அப்துல்கலாம் மாதிரி அணுவைப் பயன்படுத்தும் துறையில் - அது சமாதானம் அல்லது ஆயுத பயன்பாட்டிற்குத் துறையில் - ஈடுபட்டுள்ளவர் இல்லை டுயர் என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். அவர் சென்னையில் சொற்பொழிவின் போது சொன்னவைகளின் சுருக்கம் - “ மின்சார உற்பத்திசெய்யும் எல்லா அணு மின் உலைகளையும் உடனடியாக குப்பைக் கூடையில் தள்ளவும். “ சில ஆபத்துக்கள் இதில் இருக்கத் தான் செய்யும். அதை சயன்ஸ் எதிர்க்கொண்டு சமாளித்து விடும் “ என்ற சில விஞ்ஞானிகளின் வாதம் ஏற்புடையதன்று. ஏனென்றால், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணு மின் உலைகளின் உற்பத்திச் சங்கலி மிகவும் சிக்கலானதும், மிகவும் அதிக செலவை உண்டாக்கும் வகையிலும் அமைந்த ஒன்றாகும். அத்துடன், இந்த...