Posts

Showing posts from May, 2025

ஆபரேஷன் சிந்தூரம்

Image
ஆபரேஷன் சிந்தூரம் என்றால் இந்துப் பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் காக்க எடுக்கப்பட்ட எதிர்தாக்குதலாகும்.   பஹல்காமில் முஸ்லீம் மத தீவிரவாதிகள் ஐவரால் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் அவர்களின் மதம் ஹிந்து மதம் என்பதை உறுதி செய்ய குரானின் கலிமாவை ஓதச் சொல்லியும், அவர்களின் ஆடைகளை அவிழ்த்து 'அவர்கள் சுன்னத் செய்யாதவர்கள்' என்பதை அறிந்து - அவர்கள் ஹிந்துக்கள் என்பதை இந்த தீவிரவாதிகள் ஊர்ஜிதம் செய்த பிறகே துப்பாக்கியால்   சுடப்பட்டு  உயிரிழந்தார்கள்.  'எங்களையும் சுடுங்கள்' என்று சொன்ன அவர்களின் மனைவிகளிடம் ' உங்களை உயிரோடு விடுகிறோம் . போய் உங்கள் மோடியிடம் சொல்லுங்கள் ' என்று அந்த முஸ்லீம் மத தீவிரவாதிகள் மிகவும் கீழ்த்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள் .  இந்த தீவிரவாதிகள் The Resistance Front (TRF) என்ற பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழு பாகிஸ்தானில் செயல்படும் Lakshar-e-Taiba (LET) என்ற மிகவும் பகங்கரமான தீவிரவாத அமைப்பாகும்.   இந்தக் கொடூரச் சம்பவம் 22- ம் தேதி ஏப்ரல் பிற்பகல் சுமார் 2:15 மணி...

புத்த பூர்ணிமா - 12 - 05 - 2025 - திங்கட் கிழமை

Image
  இந்த வருட புத்த பூர்ணிமா புத்தரின் 2587 ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டமாகும் .  புத்தர் கி.மு. 623 ஆம் ஆண்டு லும்பினியில் பிறந்ததாக நம்பப்படுகிறது.   புத்தர் தம் உபதேசங்களில் எதையும் எழுதி வைக்கவில்லை . ஆகையால் புத்தர் பொன் மொழிகள் எல்லாம் அவரது சீடர்களின் மூலமாகவே தெரிய வந்துள்ளது . அவைகள் எல்லாம் தொகுத்து பெளத்த திருமறை நூலகள் என்று அறியப்படுகின்றன . அந்த பெளத்த திருமறை நூல்கள் பத்தாகும். அவைகள்: தம்ம பதம், தீர்க்க நிகாயம், ஸம்யுத்த நிகாயம் , மத்யம நிகாயம் , அங்குத்தா நிகாயம் , வினய பிடகம் , உதாணவர்கம் , ஸூத்ர நிபாதம் , இதயுக்தம் , குட்டக பதம் .  எவ்வளவு வருடங்கள் சென்றாலும் புத்தரின் வாழ்க்கையும் , அவரது போதனைகளும் மதம் கடந்து செயல்பட வேண்டிய உன்னத உரைகளாகும்.   புத்தரின் புனித உரைகள் பலவிதமாக மாற்றம் கொண்டு உலகில் பரவி உள்ளன. ஆகையால் புத்தரின் உண்மையான பொன் மொழிகளை அறிய ஆர்வம் கொள்வது அதிசயமில்லை.   அதற்குத் தீர்வு: புத்தர் பொன் மொழிகள் என்ற அரு. நாமநாதன் தொகுத்து வழங்கிய நூலாகும். அரு. நாமநாதன் ஒரு சிறந்த தமிழ் இலக்கியச் சிற்பி. கா...

குஜராத் புஜ்ஜை பூகம்பமும், மோடியின் மீட்புப் பணிகளும்

Image
மோடி முதல்வராவதற்கு முன்னர் , 2001 ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் 26 ஆம் தேதி , புஜ்ஜை மையமாக வைத்து ஏற்பட்ட கோர பூகம்பத்தில் , சுமார் 10 நிமிடங்களிளெல்லாம் , கட்ச் , ஜாம் நகர் , ராஜ்கோட் , சுரேந்திர நகர் மற்றும் பட்டான் மாவட்டங்களில் இருந்த வீடுகள் , பள்ளிக் கூடங்கள் , மருத்துவமனைகள் , வியாபார மையங்கள் என அனைத்தும் சீட்டுக்கட்டு போல் கீழே விழுந்து நொறுங்கின. இடிபாடுகளில் மாட்டிக்கொண்டு சுமார் 14,000 பேர் உயிர் இழந்தனர். சுமார் 1,67,000 பேர் காயமடைந்தனர். பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை இழந்தனர். பூகம்பத்தால் பள்ளிகளில் உள்ள 8000 வகுப்புக் கூடங்கள் முற்றிலுமாக இடிந்து போயின. மேலும் 42,000 வகுப்புக் கூடங்கள் சேதமடைந்திருந்தன. 90 க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய பாலங்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத படி உடைந்து போயிருந்தன. நரேந்திர மோடி , 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு , பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த புணரமைக்கும் பணியை விரைவுபடுத்தினார். குடிநீர் குழாய்களும் , கால்வாய்களும் , கழிவுநீர் குழாய்களும் பெரிதும் சேதப...

நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் மோடியின் வீர முழக்கம்

Image
மதிப்புக்குரிய அத்வானி அவர்களே! தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களே! மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களே , புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே , நீங்கள் அனைவரும் ஏகமனதாக எனக்குப் புதிய பொறுப்பை அளித்துள்ளீர்கள். அதற்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். குறிப்பாக , என்னை ஆசீர்வதித்த அத்வானி அவர்களுக்கும் ராஜ்நாத் அவர்களுக்கும் நன்றி. நான் இத்தருணத்தில் அடல் (வாஜ்பாய்) அவர்களை நினைவுகூர்கிறேன். அவரது உடல்நலன் சீராக இருந்திருந்தால் அவர் இன்று இங்கு இருந்திருப்பார். அவரது வருகையால் இந்நிகழ்ச்சி முழுமை அடைந்திருக்கும். இருப்பினும் அவரது ஆசி நம்முடன் இருக்கிறது. இனிமேலும் இருக்கும். பதவி முக்கியமல்ல நாம் இப்போது ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம். நாம் அனைவரும் புனிதமாகப் பணியாற்றுவோம்... மக்கள் நலன் முக்கியமே தவிர , பதவி அல்ல. பணியும் பொறுப்பும் மிகப் பெரியவை. நீங்கள் எனக்கு அளித்துள்ள இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியைவிட என் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை. நாம் அனைவரும் நமக்குள்ள...