Posts

Showing posts from September, 2024

ஏழுமலையான் கோயில் லட்டு நெய்யில் கலப்படம்

Image
  கலப்படம் என்றால் சாதாரண கலப்படம் இல்லை . ஏழுமலையான் கோயில் லட்டுக்கு உபயோகிக்கும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் , சோயா பீன் , சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது .  குஜராத்தில் உள்ள NDDB CALF என்ற லபராட்டரியில் ஜூலை 12- ம் தேதியில் நெய் சாம்பில்கள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு , அதன் அறிக்கை ஜூலை 23- ம் தேதி தேவஸ்தானத்திற்கு அளிக்கப்பட்டது .   அந்த ஆய்வு அறிக்கையில் தான் திருப்பதி லட்டு தயாரிக்க உபயோகிக்கப்படும் நெய் கலப்படம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அனைத்து பாலாஜி பக்தர்களையும் உள்ளம் குமுற வைத்துள்ளது .  அந்த அறிக்கைகளின் இரு நகல் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் பதில் ஆகியவைகள் உங்கள் பார்வைக்கு மேலே பிரசுரமாகி உள்ளது .  லட்டு மற்றும் இதர தேவைகளுக்கு 5000 டன் நெய்யை திருப்பதி தேவஸ்தானம் வாங்க வேண்டும் . ஒவ்வொரு ஆறு மாதமும் டெண்டர் மூலம் 1400 டன் நெய்யிலிருந்து 2000 டன் நெய் வரை வாங்குகிறார்கள் . இதைக் கண்காணிக்க தேவஸ்தானத்தில் தனியாக ஒரு கமிட...

நவராத்திரி - ஒன்பது நாள் விழா 03 - 10 - 2024 -லிருந்து 12 - 10 - 2024 வரை

Image
நவராத்திரி ஒன்பது நாட்கள் ஒன்பது நிறங்களை முன்னிலைப் படுத்தி ஆனந்த மயமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாகும் . ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிறம் . ஒன்பது நாட்களில் சிறப்பெய்தும் நிறங்கள் : மஞ்சள் , பச்சை , சாம்பல் , ஆரஞ்சு , வெள்ளை , சிவப்பு , கரும் நீலம் , இளம் சிவப்பு , ஊதா இந்தியாவின் தென் பகுதி மக்கள் குறிப்பாக தமிழகத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவர் .  அப்போது கும்மி கோலாட்டம் என்று அமர்க்களப்படும் .  குஜாராத்தில் தாண்டியா என்ற பெண்களும் - ஆண்களும் சேர்ந்து ஆடும் ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது . அப்போது பலவிதமான வண்ண ஆடைகளில் தோன்றி ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிப்பார்கள் .   கல்கத்தாவில் நவராத்திரி காளி சிலைகளை பொது வெளியிடங்களில் பெரிய பந்தல்களை உருவாக்கி அதில் அந்த பிரம்மாண்டமான சிலைகளை வைத்து பூஜித்து பிறகு கடலில் கறைப்பார்கள் .  இந்த காளி பூஜை கல்கத்தாவாசிகளான பெங்காலிகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு மிகவும் முக்கியமான பண்டிகையாகும் .   மஹ...