Posts

Showing posts from August, 2024

ஆகஸ்ட் 9, 2024 அன்றைய மமதாவின் இருண்ட தருணம்

Image
31-வயது 'நிர்ப்பயா' என்ற பயிற்சி பெறச் சேர்ந்த டாக்டரின் உடல் ஆர்.ஜி.கார் மெடிகல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடலின் செமினார் ஹாலில் உயிரற்ற நிலையில் இருந்துள்ளது. அவரது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் படி அந்தப் பெண் டாக்டர் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, அவரது உடல் உறுப்புக்கள்  சேதப்படுத்தப்பட்டு - குறிப்பாக அவரது முகம், கழுத்து ஆகியவைகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளன. அவரும் கற்பழிக்கப்பட்டதும் அந்த அறிக்கை உறுதி செய்துள்ளது. அவர் ஒருவருக்கும் மேற்பட்டவர்களால் கற்பழிக்கப்பட்டாரா என்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தவில்லை.   இந்த இழி செயலைச் செய்தவன் என்று சஞ்சய் ராய் என்ற அதே ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு சிவிக் வாலண்டியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிவிக் வாலண்டியர் என்பது மமதா பானர்ஜியால் இளஞர்களுக்கு வேலை வாய்ப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அப்படி வேலையில் சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் குறைபாடுடையவைகள் என்பது தெரிந்த ஒன்றே. இது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்பதை அறிய வேண்டும்.   இந்த சஞ்சய் ராய் எப்படிப்பட்டவன் என்பதை சி.பி.ஐ. இவ்வாறு த...

ஆவணியா அவிட்டம் என்ற உபாகர்மா - 19 - 08 - 2024 - திங்கட் கிழமை

Image
  ஆவணியா அவிட்டம் என்ற பூணூல் மாற்றும் கர்மா பிராமணர்களுக்கு உரித்த ஒரு சடங்காகும். இது சனாதன தர்மத்தைக் காக்கும் கடமையைச் செய்ய பணிக்கப்பட்ட பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு முக்கியமான கர்மாவாகும். பிராமணர்களுக்கு அடையாளமான குடுமி போய்விட்டது. பூணூல் வெளிநாடுகளுக்கு மேல் படிப்பு, வேலை ஆகியவைகளுக்காகச்   செல்லும் பிராமணர்கள் பூணூலை அப்பா - அம்மாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். நெற்றியில் விபூதி, கோபிச் சந்தனம், நாமம் - ஆகியவைகள் காணாமல் போய்விட்டன. படிப்பு, பதவி, பணம், பகட்டு ஆகியவைகளில் பிராமணர்கள் ஆசை கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். அவர்கள் சனாதன தர்மத்தைக் காக்க தங்களை அர்ப்பணித்து ஒரு நித்திய தியாக வாழ்க்கையை அனுசரிக்க வேண்டும் என்பது பிராமணர்களுக்கான விதி. ஹிந்து மதத்தைக் காக்க இந்த எளிய வாழ்க்கை தான் அவர்களுக்கு இடப்பட்ட வழிமுறையாகும். ஆனால் அதிலிருந்து அனேகமாக பல பிராமணர்கள் குடும்பம் குடும்பமாக விடுபட்டு, சனாதன   தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் தவறிழைத்துத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமணப் பெண்களால் தங்கள் நீண்ட தலைமுடி, பின்னல், நெற்றியில் ...