Posts

Showing posts from April, 2024

உச்ச நீதி மன்றத்தில் உச்ச கட்ட அதீத அநீதிச் சொற்பிரயோகங்கள்

Image
  நீதி மன்றங்கள் எல்லாம் பொதுமக்களைக் காக்கவும், வழி காட்டவும், அரசியல் சாசனத்தின் ஷரத்துக்கள் அனைவராலும் பின்பற்றப் படவைப்பதும் ஆகிய அனைத்தும் அதன் கொள்கையாகவும், செயலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதியாகும். அதைச் செயல்படுத்தும் நீதிபதிகள் நேர்மை, பொறுமை, கோபம் கொள்ளாமை, இனிய சொற்கள் ஆகிய குணநலன்களைப் பெற்ற தூய உள்ளத்தினர்களாக இருக்க வேண்டியது நியதியாகும். ஆனால் சில நேரங்களில் சில உச்ச மன்ற நீதிபதிகள் இந்த நியதிக்குப் புறம்பாகச் செயல்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் இரண்டு குறட்பாக்களை குறிப்பிடுவது சாலச் சிறந்ததாகப் படுகிறது. அந்த இரு குறட்பாக்கள் இதோ உங்கள் கவனத்திற்கு:   1.    அதிகாரம் 10: இனியவை கூறல் குறள் 100: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது . 2.    அதிகாரம் 13: அடக்கமுடைமை   குறள் 127:...

தமிழ்ப் புத்தாண்டு குரோதி வருடம் – 14 – 04 – 2024 – ஞாயிற்றுக் கிழமை

Image
  இந்த வருஷத்திய வெண்பா பலன் நல்ல பலனைத் தெரிவிக்கவில்லை. என்றாலும் பொதுப்பலன் சாதகமாக இருக்கிறது.   குரோதி வருஷத்திய வெண்பா பலன் : கோரக் குரோதிதனிற் கொள்ளிமிகுங் கள்வரினால் பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க அற்பமழை பெய்யுமே மஃகங் குறையுமே சொற்பவிளை யுண்டெனவே சொல்.   பாடல் விளக்கம் :   குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும் கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம் மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும் காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான விளைச்சலைத் தரும் .   வெண்பா பலன்:   குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உடல் நலனிலும் , பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.   எரிமலைச் சீற்றம் , கடல் தொந்தளிப்பு , மலைப் பிரதேசங்களில் மண் சரிவு , தீ விபத்துகள் , ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகிறது.   அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும். நாட்டில் விலைவாசி ...