முஸ்லீம் தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றும் அபாயம்

தீபாவளி 24- ம் தேதி கொண்டாட இருக்கும் நாளுக்கு முந்தைய தினமான 23- ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2 மணி அளவில் கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலுக்கு எதிரில் ஒரு கார் வெடித்துச் சிதறி உள்ளது . அந்தக் காரை ஓட்டி வந்தவன் ஜமேஷா முபின் ( 25) என்ற பயங்கரவாதி என்ற விபரம் பிறகு தெரியவந்துள்ளது . அவன் ஓட்டி வந்த காரில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் அவன் மடிந்தான் . இது வெறும் காஸ் சிலிண்டர் வெடிப்பு இல்லை – இது ஒரு பயங்கரவாதியின் செயல் – என்பதை தமிழக அரசும் – காவல் துறையும் 4 நாட்களுக்குப் பிறகு தான் உணர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது அவர்களின் தவறான கணிப்பு – பாதுகாப்பில் அஜாக்கிரதை – சிறுபான்மையினரின் நன்மதிப்பிற்கு முதலிடம் கொடுக்கும் அரசியல் ஆகியவைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது . காரை ஓட்டி வந்த அந்த முஸ்லீம் தீவிரவாதி ஜமேஷா முபின் மட்டும் தான் செத்தான் – வேறு பொதுமக்களுக்கும் எந்தவிதமான உயிர்ச்சேதமோ – பொருட் சேதமோ இல்லை என்பதை அறிந்த கோவை மக்கள் “ கோட்டை சங்கமேஸ்வரர் தான் இந்த தீவிரவாத தா...