Posts

Showing posts from February, 2022

விஷ்ணு சகஸ்ரநாமம் அர்தத்த்துடன்

Image
  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் ஹைபர் டெக்ஸ்ட் பண்ணிய பொருளடக்கம் பக்கம் இஃது. 👇 வரிசையாகத் தலைப்புகளும் , எண் வரிசையில் சுலோகங்களின் முதல் வார்த்தையும் தரப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தலைப்புகள் அல்லது சுலோகத்தின் முதல் வார்த்தையில் அழுத்தினால் நேரே அந்தச் சுலோகத்தின் அர்த்தம் தந்திருக்கும் பகுதியைத் திறந்துவிடும்.   இந்தப் பக்கத்தை வைத்துக்கொண்டால் முழு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சுலோகங்களையும் வரிசையாகப் பொருளோடு படித்துவிட முடியும்.   https://sribhagavannama.blogspot.com/2021/12/blog-post_79.html?m=1

சமத்துவ சிலையாக பிரமாண்ட ராமானுஜர் ஐம்பொன் சிலை திறப்பு

Image
  தெ லு ங்கானா மாநிலம் ஐதராபாத் முச்சிந்தலில் ஸ்ரீராமானுஜருக்கு ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 216 அடி உயர சிலையை பிரதமர் மோடி பிப்ரவரி 5- ம் தேதி 2022 பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை நன்நாளில் திறந்து வைத்தார். 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டு 500 டன் எடையில் திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.  ‘ ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க வித்திட்டவர். இவர் வாழ்ந்து முடிந்து 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி , அவருக்கு தெலங்கானா மாநிலம் , ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் இந்த  ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் சிறப்பு இங்கே பட்டியல் இடம்பட்டுள்ளது .   * இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது .   * சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப...

16 -2 – 2022 புதன் கிழமை – மாசி மக திருவிழா

Image
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால்கொண்டாடப்படும் ஒரு சிறப்பான திருவிழா நாளாகும். அந்த நன் நாளில் கடல் – ஆறு – குளம் ஆகியவைகளில் புனித நீராடி , பித்ருக்களுக்கு தர்பணம் செய்து வழிபடுவது சிறப்பாகும் . மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை "பிதுர் மகா ஸ்நானம்" என்கிறது சாஸ்திரம். மக நட்சத்திரத்தை "பித்ருதேவ நட்சத்திரம்" என்று அழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன் , பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும் , மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரி யா தை மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். பிரளயத்துக்குப் பிறகு , உலக உயிர்கள் அனைத்தும் ஒரு குடத்தில் இருந்து தோன்றிய தலம் என்பதால் கும்பகோணமே உலக உயிர்களின் பிறப்பிடம் என்பர். ஒட்டுமொத்த உயிர்களின் பீஜங்களும் பாதுகாக்கப்பட்டு பெரும் ஊழ...