Posts

Showing posts from May, 2020

மோடி சர்க்காரின் 20 லட்சம் கோடி நிவாரணம்

Image
பொருளாதார நிபுணர்கள் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவதிப்படும் ஏழை – எளியோர்கள், தெருவியாபாரிகள், பல வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடம் மற்றும் பிற தொழிற்கூடங்களில் வேலை செய்ய வந்தவர்கள், சிறு- குறு தொழிற் கூடங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகள், நடுத்தர நேர்மையாக வரிசெலுத்துவோர்கள், லாரி- ஆட்டோ – பஸ் ஓட்டுனர்கள் என்று அனைத்து மக்களும் பயன்படும் வகையில் இந்த மஹா பெரிய புரட்சிகரமான நிவாரணத் திட்டம் மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்று பாராட்டி உள்ளனர். ‘நாங்கள் மொத்த பொருளாதார உற்பத்தியில் 5% நிவாரணம் அளிக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால், மோடி அரசோ 10% என்ற அளவில் நாங்கள் கேட்டதற்கும் மேலே இரண்டு பங்கு அதிகமாக திட்டம் தீட்டி உள்ளார்கள். ‘இந்தியாவை சுய சார்பு நாடாக உருவாக்கும்’ மோடியின் இலட்சியக் கனவை நினைவாக்கும் திட்டங்களாகும். என்பது தான் ஒரு நேர்மையான மதிப்பீடாகும். இதற்கு ஐந்து முக்கிய காரணிகளை உணர்ந்து, அவைகளை மேற்கொண்டு, மேம்படுத்தி, இந்தியாவை ஒரு வலிமையான சுயசார்பு நாடாக உருவாக்க 130 கோடி மக்களும் உறுதி ஏற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு ...

ஓம் குருப்யோ நமஹ: பெரியவா திருவடிகளே சரணம்

Image
மஹா ஸ்வாமிகள் – பெரியவா என்று காஞ்சி மட பக்தர்கள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை வணங்குவர். அவரது ஜனனம்: 20-05-1894. ஜீவ சமாதி அடைந்த நாள் – 08-01-1994. 99 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து ஹிந்து தர்மத்தை நிலை நாட்டிய காஞ்சிமட பீடாதிபதியின் 126-வது வருடப் பிறந்த நாளான 20-ம் தேதி மே மாதம் 2020 அன்று அவரது பாதார விந்தங்களில் விழுந்து நமஸ்கரித்து அவரது ஆசியைப் பெறுவோமாக. நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் ஸ்ரீ சந்திரசேகரரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் காஞ்சி மடத்தின் 68-வது பீடாபதியாவார். இந்தியா பூராவும் கால்நடையாகவே பூஜ்ய ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் போல் திக்விஜயம் செய்து சனாதன ஹிந்து மதத்தை வேரூண்டச் செய்த மஹான். மஹா ஸ்வாமிகளின் இரு அருளுரைகள்: 1. ஹிந்து மதத்தில் பல மூர்த்திகள் இருப்பதற்குக் காரணம்: ’ஒரு மூர்த்தி இருந்தால் போதாதா? இவ்வளவு மூர்த்திகள் எதற்கு ஸ்வாமி?’ என்று காஞ்சி மகா பெரியவாளிடம் ஒருமுறை கேட்டார்கள். அதற்கு, மகா பெரியவா இப்படியாக அருளினார் என்கிறது ‘தெய்வத்தின் குரல்’. ’’ நாம் சாப்பிடுகிறோம். வயிறு நிரம்புவதற்காகத்தானே சாப்பிடுகிறோம். எதைச் சாப...

1232-வது ஆண்டு ஜகத் குரு ஆதி சங்கரரின் ஜன்ம ஜெயந்தி – 27-04-2020

Image
கடவுளின் தேசம் என்று போற்றப்படும் திவ்விய கேரளாவில் உள்ள காலடியில் கி.பி. 788-வது வருடத்தில் பிறந்த சங்கரர் சன்னியாசம் பெற்று பாரத தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, ஹிந்து மதத்தின் ஆணி வேரான அத்வைத வேதாந்தத்தை இந்தியாவில் நிலையாட்டினார். 32-வயதே வாழ்ந்த ஆதி சங்கரர் கி.பி. 820-வது வருடத்தில் மறைந்தார். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் ஆதி சங்கரர் ஆற்றிய பணி அபரிமிதம். அவரை சிவபிரானின் அவதாரமாகவே ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர். புத்தரின் புனிதமான அஹிம்சைத் தத்துவம் ஹிந்து மதத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், புத்தரின் கடவுள் கொள்கையால் புராதன மதமான ஹிந்து மதம் பாதிக்கப்பட்டதை ஆதி சங்கரர் தடுத்து அத்வைத சிந்தாந்தத்தைப் பரப்பி ஹிந்து மதத்தைக் காப்பாற்றினார். புத்தர் பிறப்பால் ஒரு ஹிந்து அரசர். ஆனால், ஹிந்து மதத்தின் சடங்குகளில் உயிர்பலி இடுவதை அவர் மனது ஏற்கவில்லை. ஆகையால், ஒரு புது மதத்தை – அஹிம்சையை முக்கிய கொள்கையாகவும், உயிர்கொலைக்குக் காரணமான கடவுளையும், கடவுள் சிலை வழிபாட்டினையும் எதிர்த்தார். ஆனால் புத்த மதத்தைப் பரப்பிய அசோகர் காலத்தில் உயிர்கொலைகள் உணவுக்...

Beautiful song jagadguru Sri shankaracharya

Image

Beautiful song jagadguru Sri shankaracharya

Image