Posts

Showing posts from January, 2019

ரஃபேல் - திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம்

Image
வாசகர்: ரஃவேல் போர் விமானம் வாங்க முந்தைய அரசு பேசிப் பேசியே நாட்களைக் கடத்தியது. பத்து ஆண்டுகளாக எந்த உடன்படிக்கையும் செய்ய வில்லை. விமானம் வாங்க எங்கே இருக்கிறது பணம்? – என்று அப்போதைய மந்திரி ஏ.கே.அந்தோனி வெளிப்படையாகவே ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், மோடி 36 போர் விமானங்கள் – இடைத்தரகர்கள் இன்றி – இன்றைய கால கட்டத்தில் உள்ள அனைத்து திறனும் கொண்ட புதிய டெக்னாலஜியுடன் கூடிய விமானங்கள் – வாங்க முடிவெடுத்து வெற்றி கண்டுள்ளார். இந்த துரித நடவடிக்கையிலும் விமானங்கள் இந்த வருடம் செப்டம்பரிலிருந்து தான் இந்தியாவிற்கு வர இருக்கிறது. இது ஏதோ கடைக்குப் போய் ஒரு பொருள் வாங்குவது போல் இல்லை. அடிப்படை விமானம் ஒரு விலை – அதில் இந்தியாவின் குறிப்பிட்ட அதிநவீன அம்சங்கள் (India Specific Enhancement) சேர்த்து ஒரு விலை என்று ஒப்பந்தம் செய்த பிறகு தான் அதற்கு ஏற்ப தயார் செய்யப்படும். இதற்கு கால அவகாசம் ஆகும். அந்த கால கட்டத்தில் சில புதிய கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்தால் அதற்கான விலையையும் கொடுத்து, அதையும் சேர்க்க வைப்பது தான் நாட்டு நலனில் அக்கரை கொண்ட தலைவர்களின் கடமையாகும். ஏனென்றால்...

மோடி அரசின் பொதுப் பிரிவினருக்கு கல்வி – அரசு வேலையில் 10% இட ஒதிக்கீடு

Image
இட ஒதிக்கீடு என்பது அம்பேத்கர் – மஹாத்மா காந்தி ஆகிய இருவரும் 24-09-1932 அன்று பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 148 தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்ட சட்டம் கையெழுத்தாகிய தினத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது. அந்த ஒதிக்கீடு, அவர்களுக்கு கல்வி – வேலை வாய்ப்பு ஆகியவைகளில் அவர்களின் சமூக அநீதி – தீண்டாமை ஆகியவைகளால் பாதிக்கப்பட்டதால் அவைகளைச் சீர் செய்யும் செயலாக இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்று அவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வழி வகுத்துள்ளது.   1954-ல் முதன் முதலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்ட 20% மொத்த ஒதிக்கீடு, 1982-ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% - என்று பிரிக்கப்பட்டது. அந்த விகிதா சாரத்தின் படி அந்த இரு சமூகத்தினரும் பொதுப்பணித்துறை வேலைகள் மற்றும் அரசாங்கம் மற்றும் அரசாங்க மான்யம் பெறும் கல்வி நிலையங்கள் ஆகியவைகளில் இட ஒதிக்கீடு உறுதி செய்யப்பட்டது. மொரார்ஜி தேசாய் ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி தாழ்த்தப்பட்ட – பழங்குடியினர்கள் போல் இந்திய ஜனத்தொகையில் 52% அளவில் இருக்கும் சமூகம் மற்றும் ...