Posts

Showing posts from July, 2017

காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

Image
காந்தியை சுட்டுக் கொன்றதற்கு கோட்சேவின் காரணம் எந்த வகையிலும்   ஏற்புடையது அன்று . கோட்சேவின் தேச பக்தி தடம் புரண்டதால் ஏற்பட்ட விபரீதம் அவன் காந்திஜியைக் கொன்றான் . இது எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் , எந்தக் காரணத்தை முன் வைத்தாலும் அவைகளை மூர்க்கமாக எதிர்க்கத் தான் வேண்டும் . என்றாலும் , ஒரு சரித்திர நிகழ்ச்சியாக அவன் வாக்கு மூலத்தைப் படிக்கலாம் டெ ல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன். "தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக...

மோடியின் இஸ்ரேல் பயணத்தின் புகைப்படத் தொகுப்பு

Image

இந்திய – இஸ்ரேல் உறவில் இமாலய வெற்றி

Image
மோடியின் இஸ்ரேல் நாட்டின் மூன்று நாட்கள் பயணம் – ஜீலை 4- லிருந்து ஜீலை 6- ம் தேதி வரை – மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் , இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாஹு மோடி கூடவே பயணித்து கவுரவித்த விதம் பற்றி உலகமே வியந்துள்ளது . மோடியை வரவேற்க வரும் பொழுது , அவரது கோட்டில் இஸ்ரேல் நாட்டுக் கொடி பொரித்த சிறிய உலோகச் சின்னத்துடன் அதே அளவு   இந்திய தேசியக் கொடிச் சின்னத்தையையும் அணிந்து வந்து தமது நாட்டு மக்கள் இந்தியாவை மனதார மதிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் . மோடியை தமது இல்லத்திற்கு வரவழைத்து, தமது மனைவியை அறிமுகப்படுத்தி, விருந்தும் அளித்துக் கவுரவித்திருக்கிறார் இஸ்ரேல் நாட்டுப் பிரதமர். இது ஒரு அசாதரணமான செயல் என்பதை உலகமே ஒப்புக் கொண்டுள்ளது . அது இஸ்ரேல் இந்தியர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடன் என்று தான் சொல்ல வேண்டும் . யு . எஸ் . ஜனாதிபதி மற்றும் போப் ஆகியவர்களுக்கு கொடுக்கும் மரியாதையைப்...