Posts

Showing posts from May, 2017

நீதிபதி கர்ணன் பூண்ட தலித் கவச அங்கி

Image
நீதிபதி சின்னஸ்வாமி ஸ்வாமிநாதன் கர்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 30-03-2009 நியமனமானார். அந்த தினத்திலிருந்து அவர் தாம் சார்ந்த நீதித் துறையைப் பற்றியும், தம் சக நீதிபதிகளைப் பற்றியும் குறைகூறி வந்துள்ளார். இதை அவர் மீடியா மூலம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு நீதிபதி பதவிக் கருப்புக் கோர்ட்டை விட, ஜாதி தலித் கவச அங்கியைத் தான் தம் பதவியில் மிகவும் விரும்பி அணிந்துள்ளார். அந்த தலித் கவசத்தை அவர் மிகவும் விரும்பத்தகாத வகையில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை கீழே உள்ள விவரமான அவரது செயல்கள் தோலுருத்துக் காட்டும் என்பது திண்ணம். நவம்பர் 2011 அன்று தாழ்த்தப்பட்ட ஜாதி தேசிய ஆணையத்தில், கர்ணன் ‘தாம் ஒரு தலித் என்பதால், சக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்னைத் துன்புறுத்தியும், தண்டித்தும் கொடுமைப் படுத்துகிறார்கள். என் வேலையிலும் குறிக்கிடுகின்றனர்’ என்று குற்றம் சாட்டி உள்ளார். இதற்குச் சான்றாக, கர்ணன் தன் சகநீதிபதியுடன் ஒரு கல்யாணத்திற்குச் சென்ற போது, அந்த சகநீதிபதி தமது காலை வேண்டுமென்றே என் ...

2579-வது கவுதம புத்தரின் வருடப் பிறந்த நாள் – 10-05-2017

Image
  புத்தர் (563-483 கி.மு.) நேபாலில் உள்ள லும்பினியில் வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் பிறந்து, புத்தகயாவில் ஞானோதயம் பெற்று, மத்தியப் பிரதேச சாரநாத்தில் தமது 8 அம்ச தர்மத்தை முதன் முதலாக உபதேசம் செய்து, உத்திரப் பிரதேச குஷிநகரில் தமது 80-வது வயதில் முக்தி அடைந்தார். புத்த ஜெயந்தி, விசாக், வைசாகா – என்று பல பெயர்களில் புத்தரின் விழா கொண்டாடப்படுகிறது. புத்தர் பிறந்த தினம், புத்தர் ஞானம் பெற்ற தினம், புத்தர் முத்தி அடைந்த தினம் எல்லாம் இந்த வைகாசி மாத பூர்ண சந்திரன் ஒளி விடும் ஒரே நாள் என்பது ஒரு பெரிய ஆச்சரியமான செய்தி. புத்தர் என்றால் ‘உத்தம புருஷர்’ என்றே பொருளாகும். புத்தரின் முக்கிய போதனை ‘நான்கு புனிதமான உண்மைகள்’ என்பதில் அடக்கம். துக்கம், துக்கத்தின் மூலம், துக்க நிவர்த்தி, துக்க நிவர்த்திப்  பாதை – ஆகியவைகள் தான் அந்த நான்கு புனித உண்மைகளாகும். முதல் உண்மை மனித வாழ்க்கையின் பிரச்சனைக்கு  காரணம் – துக்கம் என்றும், இரண்டாவது உண்மையில் துகத்திற்கான காரணங்களை அறிய வேண்டும் என்றும் போ...