Posts

Showing posts from July, 2016

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - ஆணவமா? அவசியமா?

Image
சங்கரராமன் கொலை வழக்கு - ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு - இந்த இரண்டு வழக்குகளும் தமிழக அரசின் ஆணவமான போக்கின் உச்ச கட்டம் என்பதுதான் நிதரிசன உண்மை . நவம்பர் 2004 சமயத்தில் சங்கராச்சாரிய ஸ்வாமிகள் ஸ்ரீஜயேந்திரர் ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது கூட , மீண்டும் அவர் ஜெயிலிருந்து பெயிலில் வெளியே வரக் கூடாது என்ற எண்ணத்தால் , ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் அவரைக் கைதி செய்ய தமிழக அரசால் உத்திரவு விடப்பட்டது . நவம்பர் 17, 2004 அன்று தமிழ் நாட்டு முதல் அமைச்சரான செல்வி ஜெயல்லிதா அவர்கள் சட்ட சபையில் தெரிவித்தது :’ ராதாகிருஷ்ணன் ‘ சோமசேகர கனபாடிகள் ’ என்ற புனைப்பெயரில் தன்னைப் பற்றி மிகவும் கடுமையான குற்றச் சாட்டுக்களை கடிதங்களாக எழுதியுள்ளார் என்று ஜெயேந்திரர் சந்தேகப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது . அதனால் ஜெயேந்திரர் அடியாட்களை நியமித்து , ராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .’ ஆனால் இதே புனைப்பெயரில் சங்கரராமன் ஜெயேந்திரரைப் பற்றிப் புகார் கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது . ஒரு புராதன மடத...

பிரான்ஸ் நைஸ் நகரத்தை நரகமாக்கிய முஸ்லீம் தீவிரவாதி

Image
14- ம் தேதி ஜீலை பிரான்ஸ் தேச மக்களுக்கு ஒரு முக்கியமான தினமாகும் . அது நாடு சுதந்திரமடைவதற்கு முதற்கட்ட போராட்டமான பாஸ்டில் சிறை தகர்ப்பு நாளாகும் . அதை பிரான்ஸ் நாடு தங்களது தேசிய தினமாகக் கொண்டாடி வருகின்றனர் . நைஸ் நகர மக்கள் 14- ம் நாள் ஜூலை 2016 அன்று அங்குள்ள கடற்கரையில் திரளாகக் கூடி வாணவேடிக்கைகளைப் பார்த்துக் களித்துக் கொண்டிருந்தனர் . அப்போது இரவு நேரம் . யாரும் எதிர்பார்க்காத நிலையில் மொஹமத் லஹோயஜ் பவுஹ்லெல் என்ற துனிஷியாவில் பிறந்து பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்று நைஸ் நகரில் வசிக்கும் 31- வது நிரம்பிய இந்த முஸ்லீம் வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு 19 டன் கொள்ளளவுள்ள பெரிய டிரக் வண்டியை அந்த மக்கள் திரண்டிருந்த கடற்கரையில் வேகமாகவும் , தாறுமாறாகவும் கொலைவெறித் தாக்குதலுடன் ஓட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அவனது வெறிச்செயல் தொடர்ந்துள்ளது . ஒரு இருசக்கர வாகன ஓட்டி அந்த டிரக் வண்டியின் கதவைப் பிடித்து உள்ளே செல்ல முயன்ற போது கீழே விழுந்து இறந்து விட்டான் . பிறகு அந்த முஸ்லீம் கொலைவெறி பிடித்த தீவிரவாதியை போலீஸ் சுட்டு வீழ...