யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன்
யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் உட்டாலகா என்பவர் அருணாவின் மகன். அவர் மற்ற மாணவர்களுடன் மாத்ரா என்ற ஊரில் படன்கலா காப்யா என்பவரின் வீட்டில் குருகுல வாசம் செய்து, யாகங்களைப் பற்றி கற்றுக் கொண்டிருந்தனர். குருவான படன்கலா காப்யாவின் மனைவியை ஒரு கந்தர்வன் ஆக்கிரமித்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த சிஷ்யர்கள் குருவின் உடம்பில் புகுந்துள்ள கந்தர்வனைக் கேட்டார்கள்: நீ யார்? குருவின் மனைவின் உடம்பில் புகுந்துள்ள அந்த கந்தர்வன் பதில் சொன்னான்: எனது பெயர் கபந்த அதர்வணன். இதைத் தெரிவித்து விட்டு, குருவிடமும் சிஷ்யர்களிடம் அந்த கந்தர்வன் மேலும் சொன்னான்:குரு காப்யா அவர்களே! சிஷ்யர்களே! இந்த உலகம், மற்ற உலகங்கள், எல்லா உயிர்கள் ஆகிய அனைத்தும் ஒரு மாலையைப் போல் ஒன்றோடொன்று இணைந்து இருக்கிறது. அந்த இணைப்பிற்கு உதவும் நூல் போல் இருக்கும் அது எது? குரு: கந்தர்வனே! உண்மையிலேயே அது எது என்று எனக்குத் தெரியாது. கந்தர்வன்: இன்னொரு கேள்வி கேட்கிறேன். அதற்காகவாவது, குருவோ அல்லது சிஷ்யர்களோ பதில் தெரிந்தால் சொல்லுங்கள். உலகம் அனைத்தையும் இணைக்கும் அந்த நூலை அறிந்தவன...