Posts

Showing posts from August, 2009

உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்

உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்: யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் கார்க்கி என்பவர் ஜனகர் சபையில் இருக்கும் ஒரு பெண் தபசி ஆவார். அவர் வாகாக்னு என்பவரின் மகள். கார்க்கி என்ற அந்தப் பெண் தபசி யாஞ்யவல்கியரிடம் சில கேள்விகளை ஒரு தொடராக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டாள். பதில் அளித்துக் கொண்டே வந்த யாஞ்யவல்கியர் பிரம்மத்தைப் பற்றியும் விளக்கக் கோரிய பொழுது, 'கார்க்கியே! தர்க்கத்தை மிகவும் நீடித்து எல்லாவற்றையும் கேள்விகளால் அறிய முயலவேண்டாம்!' என்று எச்சரிக்கும் நிலைமையை கார்க்கி உண்டாக்கி விட்டார். கார்க்கி - யாஞ்யவல்கியர் சம்பாஷணை விரிவாக கீழே உள்ளது. கார்க்கி: யாஞ்யவல்கியரே! இந்த பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களும் தண்ணீரினால் ஒரு துணி நெய்யப்படுவதைப் போல் இணைந்து நெய்யும் பாவு-குறுக்கு நூலாகக் காணப்படுகின்றன. அப்படி என்றால் தண்ணீர் எதனால் இணைந்து காணப்படுகின்றது? யாஞ்யவல்கியர்: காற்றால். கார்க்கி: அப்படியென்றால், காற்று எதனால் இணைந்து காணப்படுகின்றது? யாஞ்யவல்கியர்: ஆகாய உலகங்களினால். கார்க்கி: ஆகாய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன? யாஞ்யவல்கியர்: க...

உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்:

உபநிடதத் தொடர்: பிரஹதாரண்ய உபநிடதம்: யாஞ்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் குசிதகா என்பவரின் மகன் தான் கோகலா. ஜனகர் சபையில் இருக்கும் அவர் எழுந்திருந்து யாஞ்யவல்கியரிடம் சில கேள்விகள் கேட்கிறார். பிரம்மம், பிராமணன் ஆகியவைகளைப் பற்றி அறிய கோகலா கேள்விகள் கேட்கிறார். அதற்கு மிகவும் சுருக்கமாக ஆனால் அனைவருக்கும் புரியும்படி யாஞ்யவல்கியர் பதில் அளிக்கும்படி கோகலா வேண்டுகிறார். கோகலா: யாஞ்யவல்கியரே! பிரம்மத்தைப் பற்றி தாங்கள் எனக்கு புரியும்படி விளக்க வேண்டும். அந்த உங்களது விளக்கம் சுற்றி வளைக்காமல் நேரடியாக, உடனே புரியும்படி அமைய வேண்டும். எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாதான் பிரம்மம் என்கிறார்களே, அது எப்படி? யாஞ்யவல்கியர்: உன் உடம்பிலுள்ள ஆத்மாமும், எல்லா ஜீவராசிகளிடமும் குடிகொண்டிருக்கும் ஆத்மாவும் ஒன்று. கோகலா: யாஞ்யவல்கியரே! எல்லா ஜீவராசிகளிடமும் வசிக்கும் அந்த ஆத்மாவைப் பற்றி விளக்கமாகத் தெரிவிக்க வேண்டுகிறேன். யாஞ்யவல்கியர்: ஆத்மா என்பது பசி - தாகம் இவைகளைத் தாண்டி அவைகளால் எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருக்கும் உயிருள்ள பெரும் சக்திவாய்ந்த ஜீவன். துக்கம், த...

ஒரு கைப்பிடி அரிசி - அனுப்பு: எஸ். ஷங்கர், அண்ணாநகர் மேற்கு, சென்னை.

முகவுரை: ஆதி சங்கரர் காவி உடை அணிந்து சந்நியாசம் வாங்குவதற்கு அவரது தாயார் ஆர்யாம்பாவுக்கு விருப்பம் சிறிதும் இல்லை. அவரது தாயார் சங்கரரிடம் அவர் சந்நியாசம் வாங்குவதற்கு முன் இரண்டு நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தார். ஒன்று: தான் இறக்கும் பொழுது, தன் மகன் தன் பக்கத்தில் இருக்க வேண்டும். இரண்டு: ஸ்ந்நியாசியாக இருந்தாலும், தன் மகன் தான் தனக்குத் தகனம் செய்ய வேண்டும். சிருங்கேரியில் ஆதி சங்கரர் தங்கி இருக்கும் பொழுது, தன் தாயாரின் மரணம் நெருங்கி விட்டது என்று சொல்லி, உடனே தன் தபோ வலிமையால் காலடியில் வசிக்கும் தன் தாயாரின் பக்கத்தில் சென்றடைந்தார். தன் தாயாரின் தகனக் கிரிகைகள் முடிந்தவுடன் தாயாரின் மரணத்தை நினைவு கூர்ந்து, ஐந்து ஸ்லோகங்கள் இயற்றினார். இந்த ஐந்து பாக்களில் மட்டும் தான் கடவுளைப் பற்றியோ, தன் வேதாந்தக் கருத்துக்களையோ சொல்ல வில்லை என்பது இதன் சிறப்பாகும். ஸ்ந்நியாசம் வாங்கியதால், மகனாகத் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யமுடியாது போய்விட்டதையும், தன் மனச்சாட்சி உறுத்துவதையும் தன் ஐந்து பாக்களிலும் மிக அருமையாக வர்ணித்திருக்கிறார். கடைசி வரியில் சொன்ன அவர...