Posts

Showing posts from October, 2008

சால்வையால் வாழ்த்துவோம் எழுத்து: எஸ். சங்கரன்

Image
சால்வைகள் அணிவித்து வாழ்த்தைப் பெறுவதற்குறிய சாதனையைப் படைத்தவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யு. புஷ்ஷும், நமது பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங்கும் ஆவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரண்டு நாட்டுத் தலைவர்களும் பலதடைகளைக் கடந்து 123 என்ற அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக அமுலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இது ஏதோ இரு நாடுகள் சம்பந்தப் பட்ட விஷயமல்ல. அணுசக்தி சப்ளை செய்யும் (NSG) 45 நாடுகளின் ஒப்புதல் பெறவேண்டும். இதில் உலகத்தில் உள்ள அனைத்து முன்னேறிய நாடுகளும்- சைனா உள்பட-உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களது ஒப்புதல் பெறுவதற்கு இரு தலைவர்களும் முயன்று வெற்றி பெற்றிருப்பது ஒரு ஹிமாலய வெற்றியாகும். ஏனென்றால், இந்தியா அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாமல் (NPT), புளோட்டினம் போன்ற அணு பொருள் மற்றும் ரியாக்டர் போன்ற இயந்திரங்களையும் தங்குதடையின்றிப் பெறுவதற்கு இது வழிவகுத்து விட்டது என்பது ஒரு உலக சாதனையாகும். இந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே நாடு இந்தியா ஆகும். அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாமல், இனி இந்த ஒப்புதல் வேறு எந்த நாட்டிற்கும் கொடுக்க ...

வள்ளுவம்: பெண்ணீயம்

வள்ளுவம்: பெண்ணீயம் எழுத்து: பவித்திரன் குறிப்பு: நமது நிருபர் பவித்திரன் வள்ளுவரைப் பேட்டி கண்டு, எழுதிய ஒரு வித்தியாசமான கட்டுரை இது. அவரது கருத்துக்களுடன், பலர் ஒத்துப் போகாமல் இருக்கலாம். என்றாலும், அவர் சொல்வதில் உள்ள நியாயம், நேர்மை, உங்களை ஈர்க்கும் என்று நினைக்கிறேன். - ஆசிரியர். நிருபர்: வள்ளுவப் பெருந்தகைக்கு அநேக வந்தனம். உங்களை 'வாய்மை' இதழுக்குப் பேட்டி எடுக்க பூமியிலிருந்து வந்துள்ளேன். நீங்கள் வாழ்ந்த காலத்துப் பெண்களை வைத்து, அந்த நாட்களின் வழக்கத்தை ஒட்டிப் பாடிய பாடல்கள் இந்த 21-ம் நூற்றாண்டிற்குப் பொருந்துமா என்பது தான் என் சந்தேகம். வள்ளுவர்:வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துப் பாட்டுக்களும், மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நற்குணம், நற்செய்கை, கற்பு, தெய்வமாகக் கணவனைப் போற்றும் பண்பு, கணவனின் புகழைக் காப்பது, நல்ல புதல்வரைப் பெறுவது ஆகியவைகளைத்தான் மனைவியானவள் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அது எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதுதானே? நிருபர்: கணவன் எப்படி ...