குழந்தைகள் சொற்களை ஒதுக்காதீர்கள்
குழந்தைகள் சொற்களை ஒதுக்க வேண்டாம் ஆக்கம்: ஸ்ருதி ஜி. சந்திரன், 5-ம் வகுப்பு, சிசு கிரஹா பள்ளி, பங்களூரு. நான் சொல்ல வந்ததை எல்லோரும் கவனமாகக் கோளுங்கள், குறிப்பாக பெரியோர்கள். குழந்தைகளாகிய நாங்கள் வேண்டுவது உங்களது அதிகக் கவனம்.நான் எப்போதும் வீட்டில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். நமது வீட்டில் ஒரு பிரச்சனை ஏற்ப்படும் பொழுது, குழந்தைகளான நாங்கள் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு யோசனை சொன்னால், வீட்டிலுள்ள பெரியவர்கள் அத்தனை பேர்களும், 'நீங்கள் எல்லாம் பேசாமல் இருங்கள் என்றோ அல்லது வெளியே செல்லுங்கள் என்றோ அல்லது இந்த சர்ச்சைகளிலெல்லாம் தலையிடுவதை நிறுத்துங்கள் என்றோ' எங்களை விரட்டி அடித்து விடுகிறார்கள். மிகவும் கண்ணியமான பெரியவர்கள், எங்களிடம் எதுவும் சொல்லாமல், எங்களை உதாசீனப்படுத்துவார்கள். நான் இதற்கெல்லாம் ஒன்றே ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் சிறப்பு அம்சம் கொண்டது என்பதை நிரூபிக்க எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்பது தான் எனது கோரிக்கை. 'குழந்தைகள் மிகவும் பலனுள்ளவைகளைச் சொல்வதிலும், செய்வதிலும் சிறப்பும், த...