மோடியின் 12-வது இந்திய தேச சுதந்திர தின விழாவில் நிகழ்த்திய எழிச்சி உரை

12 இந்திய சுதந்திர உரை - 12 விதமான தலைப்பாகைகள் இந்தியா பல வெளி நாட்டு - உள் நாட்டு சவல்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு மிகவும் கடினமான கால கட்டத்தில் இருக்கிறது. வலுவான பொருளாதாரம், அதி நவீன பாதுகாப்பு, திறமையான வெளியுறவுக் கொள்கை, பலமான நிதி நிலை என்று இந்தியாவை மோடி அரசு முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 'மோடி என் உற்ற நண்பர்' என்று உறவு கொண்டாடி அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவுகளை மோடியின் அன்பினால் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு மனம் மாறி மோடிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ளார். 'நான் தான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த சண்டையை நிறுத்தினேன்' என்று சுய தம்பட்டம் அடித்தார். ஒரு தரம் இல்லை; பல தரம் பொது மேடைகளில் முழக்க மிட்டார். 'மோடி தன் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று பகிரங்கமாகவும் உலக அரங்கில் முழங்கினார் டிரம்ப். இதை எல்லாம் விட 'இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணையை வாங்கக் கூடாது. வாங்கினால் சுங்க வரியை அதிகரிப்பேன்' என்று சொல்லி இந்...